தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 45ஆவது சிவத்தலமாகும். இக்கோயிலின் மூலவர் (சங்கு + ஆரண்யம் + ஈசுவரர் =) சங்காரண்யேசுவரர் ஆவார்.
Remove ads
அமைவிடம்
சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது.
அமைப்பு

வாயிலில் நுழைந்ததும் கோயிலின் வலப்புறம் அதிகாரநந்தி உள்ளது. வாயிலைக் கடந்ததும் விநாயகர், பலிபீடம், நந்தியைக் காணலாம். மாடக்கோயில் அமைப்பில் உள்ள இக்கோயிலின் மூலவர் சங்காரண்யேசுவரர் சன்னதிக்கு முன்பாக ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், பட்டினத்தார், கோச்செங்கணான், துவாரகணபதி உள்ளனர். மூலவருக்கு முன்பாக இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர், மஹாவிஷ்ணு, ஜுரஹரர், ராமர், சீதை, வலம்புரி விநாயகர், பாலசுப்பிரமணியர் உள்ளனர். மூலவர் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா உள்ளனர். அருகே தனியாக துர்க்கை உள்ளார். பலிபீடம், நந்திக்கு இணையாக கோயிலின் இடப்புறம் சௌந்தரநாயகி அம்மன் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது.
Remove ads
இறைவன், இறைவி
இக்கோயிலில் உள்ள இறைவன் சங்கவனேசுவரர், இறைவி சௌந்தரநாயகி.
சிறப்பு
சிறப்புலி நாயனார் அவதரித்த தலமெனப்படுகிறது. கபிலதேவ நாயனார் இத்தலம் பற்றிப் பாடிய பாடல் பதினொராம் திருமுறையில் இடம்பெறுகிறது. இத்தலத்தில் திருமால் வழிபட்டுப் பாஞ்ச சன்னியச் சங்கைப் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை.
வைணவத் திருத்தலம்
இக்கோயிலின் அருகே திருமங்கையாழ்வார் பாடிய நாண்மதியப் பெருமாள் எனும் வைணவத் திருத்தலம் அமைந்துள்ளது.
இவற்றையும் பார்க்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads