தியாகு (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தியாகு (Thiyagu) 1990 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சிவசங்கரி எழுதியதை எஸ்.பி. முத்துராமன் இயக்கினார். இத்திரைப்படத்தை ஏவி. எம். புரொடக்சன்ஸ் தயாரித்தது. இத்திரைப்படம் சிவசங்கரியின் நாவலை அடிப்படையாகக் கொண்ட ஒரு மனிதனின் கதை என்ற தொலைக்காட்சித் தொடரை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தில் ரகுவரன் நடித்துள்ளார், தொலைக்காட்சி தொடரிலிருந்து தனது பாத்திரத்தை மாற்றம் செய்து நடித்தார். இத்திரைப்படம் 1990 அக்டோபர் 5 அன்று வெளியிடப்பட்டு வணிக ரீதியாக தோல்வியடைந்தது.
Remove ads
நடிகர்கள்
தயாரிப்பு
சிவசங்கரி எழுதிய ஒரு மனிதனின் கதை என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது. 1978–79 ஆம் ஆண்டில் ஆனந்த விகடன் இதழில் தொடராக வந்தது. 1985 ஆம் ஆண்டில் 'தியாகு' என்ற இதே பெயரில் வெளிவந்த தொலைக்காட்சித் தொடரரைத் தழுவி ரகுவரன் நடித்தார்.[3][4] ஏ.வி.எம் புரொடக்சன்ஸ் பின்னர் இந்தத் தொடரை தியாகு என்ற தலைப்பில் ஒரு திரைப்படமாக மாற்ற முடிவு செய்தது. ரகுவரன் அதே பாத்திரத்தில் நடிக்க, எஸ். பி. முத்துராமன் இயக்குநராக நியமிக்கப்பட்டார். முத்துராமன் படத்திற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை.[5]
Remove ads
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர்.
வெளியீடும் வரவேற்பும்
இத்திரைப்படம் 1990 அக்டோபர் 5 அன்று வெளியிடப்பட்டது.[6] அப்போதைய தமிழக முதல்வர் எம். கருணாநிதிக்கு இந்த படம் திரையிடப்பட்டது . அவரது ஒரு படமாக்கப்பட்ட பேச்சு இறுதிக் காட்சியில் இணைக்கப்பட்டது.[1][2] இவையனைத்தும் இருந்தபோதிலும் வணிக ரீதியாக தோல்வியடைந்தது.[7][5]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads