திருக்களர் பாரிஜாதவனேசுவரர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருக்களர் பாரிஜாதவனேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 105ஆவது சிவத்தலமாகும்.
Remove ads
அமைவிடம்
சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி வட்டத்தில் மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் மன்னார்குடியில் இருந்து தெற்கே 21 கி.மி. தொலைவிலும், திருத்துறைப்பூண்டியில் இருந்து வடமேற்கே 10 கி.மி. தொலைவிலும் அமைந்துள்ளது.
வழிபட்டோர்
இத்தலத்தில் பராசர முனிவன், கால பைரவர், துர்வாசர் ஆகியோர் வழிபட்டனர் என்பது தொன்நம்பிக்கை.
பெயர்க்காரணம்
களர் = சபை, அரங்கம். துர்வாசருக்கு இறைவன் திருநடனக்காட்சி காட்டிய திருத்தலம்.[1]
அருகிலுள்ள ஆண்டவர் கோயில்
கோவிலூர் மடாலயத்தின் வீரகேசர ஞான தேசிக சுவாமிகளின் சமாதிக் கோயில் அருகிலுள்ளது. இது ஆண்டவர் கோயில் என்றழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads