வரிசை எண். | பெயர் | பொருள் | பெயரிட்டவர் | பெயரிடப்பட்ட நூல் | குறிப்பு |
1 | முப்பால் | மூன்று பிரிவுகளைக்கொண்ட நூல் | வள்ளுவர் (நூலாசிரியர்) | திருவள்ளுவ மாலை | முதன்மையான பெயர். வள்ளுவராலேயே நூலை இயற்றும் போது இந்தப் பெயரிட்டதாக நம்பப்படுகிறது. திருவள்ளுவ மாலையில் 15 முறை குறிப்பிடப்பட்டுள்ளது.( 9, 10, 11, 12, 15, 17, 18, 19, 30, 31, 39, 44, 46, 49, 53) |
2 | திருக்குறள் | புனிதமான குறள் | கபிலர் | திருவள்ளுவ மாலை | 12 பழமையான பெயர்களில் ஒன்று. .பெரும்பான்மையான மக்களால் இன்றளவும் உபயோகப்படுத்தப்படுகிறது. |
3 | அறம் | அழதூர் கிழார்[1] | புறநானூறு, வசனம் :34 (அனோ டொமினி 1–5 ஆம் நூற்றாண்டு ) | அறத்தை அடிப்படையாகக் கொண்டு பாடப்பட்டதால் இப்பெயர் பெற்றது. |
4 | குறள் | குறள் | | | பெரும்பான்மையான மக்களால் இன்றளவும் உபயோகப்படுத்தப்படும் இரண்டாவது பெயர் | |
5 | தெய்வ நூல், தெய்வமாமறை | தெய்வத்தன்மை கொண்ட நூல் | | | 12 பழமையான பெயர்களில் ஒன்றான இப்பெயர் சோதாசவாதனம் சுப்பராய செட்டியாரால் பயன்படுத்தப்பட்டது. |
6 | திருவள்ளுவர் வள்ளுவர் | திருவள்ளுவர் | பாரம்பரியம் | | 12 பழமையான பெயர்களில் ஒன்று. "கருத்தாகுபெயர்" இடும் நூல் வழக்கப்படி அதன் நூலாசிரியரைக் கொண்டு இப்பெயர் பெற்றது. சுவாமிநாத தேசிகரால் திருவள்ளுவர்-உம், உமாபதி சிவாச்சாரியாரால் "வள்ளுவர்"-உம் பெயர் பெற்றன. |
7 | பொய்யாமொழி | என்றும் தவறாத | வெள்ளிவீதியார் | திருவள்ளுவமாலை, வசனம்-23 | 12 பழமையான பெயர்களில் ஒன்று. |
8 | வாயுறை வாழ்த்து | | மதுரை அருவை வணிகன் இளவெட்டனார்
| திருவள்ளுவ மாலை, வ்சனம்-35 | 12 பழமையான பெயர்களில் ஒன்று. |
9 | தமிழ் மறை | தமிழ் வேதநூல் | | | 12 பழமையான பெயர்களில் ஒன்று. சிவசிவ வெண்பா எனும் நூலில் தியாகராச செட்டியார் பயன்படுத்தியுள்ளார். |
10 | பொது மறை | பொதுவான நூல் | பாரம்பரியம் | | 12 பழமையான பெயர்களில் ஒன்று |
11 | தமிழ்மனு நூல் | தமிழின் வாழ்வியல் நூல் | பாரம்பரியம் | பரிமேலழலகரின் உபயோகம் (c. 13-ஆம் நூற்றாண்டு CE) | 12 பழமையான பெயர்களில் ஒன்று. |
12 | திருவள்ளுவப் பயன் வள்ளுவப்பயன் | திருவள்ளுவரின் பங்களிப்பு | | யாப்பருங்காலகாரிகை 40 உரை | 12 பழமையான பெயர்களில் ஒன்று. நச்சினார்க்கினியார், பெருந்தேவனார் குணசேகரார் பயன்படுத்தியுள்ளனர். |
13 | பொருளுரை | அர்த்தமுள்ள எழுத்து | சீத்தலை சாத்தனார் | மணிமேகலை, வசனம்-22:61 | |
14 | முதுமொழி பழமொழி | பழமையான மொழிகள் | நரிவெரூ தலையர் | திருவள்ளுவ மாலை, வசனம்- 33 | அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் மற்றும் சிவசிவ வெண்பாவில் "முதுமொழி" என இயம்ப பட்டுள்ளது. |
15 | இரண்டு | இரண்டடி | | பெருந்தொகை, verse 1128 | |
16 | முப்பானூல் | மூன்று பிரிவுகளாலான நூல் | | | |
17 | ஒன்றே முக்காலடி ஈரடி நூல் | ஒன்றே முக்காலடியில் அமைந்த நூல் இரண்டு வரிகளில் ஆன நூல் | | | |
18 | வள்ளுவம் | வள்ளுவம் | | | மொத்தமாக அழைக்கப்படும் பெயர் |
19 | இயற்றமிழ் முதுமொழி | | | | |
20 | உள்ளிருள் நீக்கும் ஒளி உள்ளிருள் நீக்கும் விளக்கு | அகவிருளை அகற்றும் உள்ளொளி | நப்பாலத்தனார் | திருவள்ளுவ மாலை, வசனம்-47 | |
21 | மெய்ஞ்ஞான முப்பால் | தெய்வீக ஞானமளிக்கும்உணவு | | | |
22 | இருவினைக்கு மாமருந்து | கர்மவினைகளைத் தீர்க்கும் மாமருந்து | | | |
23 | வள்ளுவர் வாய்மொழி வள்ளுவன் வாய்ச்சொல் | வள்ளுவரின் வாயால் உரைக்கப்பட்ட நூல் | மாங்குடி மருதனார் மற்றும் செயலூர் கெடும் செங்கண்ணனார் (வள்ளுவர் வாய்மொழி); இறையனார் (வள்ளுவன் வாய்ச்சொல்) | திருவள்ளுவ மாலை, வசனம் 24 மற்றும் 42 (வள்ளுவர் வாய்மொழி ); வசனம் 3 (வள்ளுவன் வாய்ச்சொல்) | |
24 | மெய்வைத்த வேதவிளக்கு | உண்மையை உரைக்கும் விளக்கு | | | |
25 | தகவினார் உரை | | | | |
26 | பால்முறை | தெய்வ நூல் | கோவூர்கிழார் | திருவள்ளுவ மாலை, வசனம் :38 | |
27 | வள்ளுவமாலை | வள்ளுவரின் மொழி மாலை | | | 12 பழமையான பெயர்களில் ஒன்று "பிரபந்த தேசிகை" நூலில் வெங்கட சுப்ப பாரதியார் பயன்படுத்தியுள்ளார். |
28 | வள்ளுவதேவன் வசனம் | மாமனிதர் வள்ளுவரின் எழுத்துகள் | | பெருந்தொகை, வசனம் : 2001 | |
29 | உலகு உவக்கும் நன்னூல் | | | | |
30 | வள்ளுவனார் வைப்பு | வள்ளுவர் அருளிய செல்வங்கள் | | பெருந்தொகை, வசனம் : 1999 | |
31 | திருவாரம் | | | | |
32 | மெய்வைத்த சொல் | சத்தியம் உரைக்கும் நூல் | | | |
33 | வான்மறை | பிரபஞ்ச நூல். | | | |
34 | பிணக்கிலா வாய்மொழி | | | | |
35 | வித்தக நூல் | வாழ்வியல் வித்தைகளைக் கூறும் நூல் | | | |
36 | ஓத்து | | | | |
37 | புகழ்ச்சி நூல் | புகழ்பெற்ற நூல் | | | |
38 | குறளமுது | அமிர்தம் போலச் சுவையுடைய குறள்களால் ஆன நூல் | | | |
39 | உத்தரவேதம் | இறுதியான வேதநூல் | | | 12 பழமையான பெயர்களில் ஒன்று |
40 | வள்ளுவதேவர் வாய்மை | வள்ளுவரின் வாக்கு | | | |
41 | கட்டுரை | | | | |
42 | திருமுறை | சத்திய வழி | | | |
43 | வள்ளுவர் வாக்கு திருவள்ளுவன் வாக்கு | வள்ளுவர் உரைத்த வாக்கு | | | |
44 | எழுதுண்ட மறை | எழுத்தாக்கப்பட்ட வேதம் | கம்பர் | கம்பராமாயணம் | |