திருச்சந்த விருத்தம்

தமிழ் வைணவ இலக்கிய படைப்பு From Wikipedia, the free encyclopedia

திருச்சந்த விருத்தம்
Remove ads

திருச்சந்த விருத்தம் திருமழிசையாழ்வாரால் திருமாலைப் போற்றி 120 விருத்தப்பாக்களைக் கொண்டு இயற்றப்பட்டது.[1] சந்தங்கள் என்பது இனிய இசையை (ஒலியை) எழுப்புவது என்று பொருள்[2], இனிய ஒலிகளால் திருமாலை வணங்கி போற்றியதால் திரு என்னும் அடைமொழியைத் தாங்கி விருத்தம் என்னும் பாக்களால் பாடப்பட்டதால் இந்நூல் திருசந்த விருத்தம் எனப்பெயர் பெற்றது. இது 120 பாசுரங்களை கொண்டது, இது நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் முதலாயிரத்தில் இடம் பெற்றுள்ளது.[3] இது திருமாலை வணக்கத்திற்காகவும், கிருஷ்ணர் மற்றும் வெங்கடாசலபதி போன்ற திருமாலின் அவதாரங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. [4]

விரைவான உண்மைகள் திருச்சந்த விருத்தம், தகவல்கள் ...
Remove ads

பாடல்கள்

இந்த இலக்கியம் கிருஷ்ணரின் வாழ்க்கை, அசுரர்களை வதம் செய்தமை, நப்பின்னையை மணக்க காளைகளை அடக்கியமை, குருக்ஷேத்திரப் போரில் கிருஷ்ணரின் பங்கு ஆகியவற்றைப் பற்றிய உள்ளடக்கங்கள் இதில் உள்ளது[5]

கம்சன் மீதான கிருஷ்ணரின் வெற்றியும், பூதனையின் நஞ்சு நிறைந்த பாலை உறிஞ்சிய தெய்வ செயல்களையும், வாமனனின் மூன்றடி மண் செயல்களையும் கீழ்கண்ட பாடல் குறிக்கிறது:[6]

வெஞ்சினத்த வேழ வெண் மருப்பு ஒசித்து உருத்த மா

கஞ்சனைக் கடிந்து மண் அளந்துகொண்ட காலனே

வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கினாய்

அஞ்சனத்த வண்ணன் ஆய ஆதிதேவன் அல்லையே?

திருச்சந்த விருத்தம், 43-ம் பாசுரம்[7]

கம்ப ராமாயணத்தை எழுதிய கம்பர், இந்தப் படைப்பின் சில பாடல்களிலிருந்து உள்ளூக்கம் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது:[8]

வானகமும் மண்ணகமும் வெற்பும் ஏழ் கடல்களும்

போனகம் செய்து ஆலிலைத் துயின்ற புண்டரீகனே

தேன் அகஞ்செய் தண் நறும் மலர்த் துழாய் நன் மாலையாய்

கூன் அகம் புகத் தெறித்த கொற்ற வில்லி அல்லையே?

திருச்சந்த விருத்தம், 30-ம் பாசுரம்[9]
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads