திருமழிசை ஜகந்நாத பெருமாள் கோயில்

என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் திருமழிசை புறநக From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருமழிசை ஜகந்நாத பெருமாள் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் திருமழிசை புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[3]

விரைவான உண்மைகள் திருமழிசை ஜகந்நாத பெருமாள் கோயில், ஆள்கூறுகள்: ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 78 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள திருமழிசை ஜகந்நாத பெருமாள் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13.0523°N 80.0615°E / 13.0523; 80.0615 ஆகும்.

இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[4] இக்கோயிலில் திருமங்கைவல்லி தாயார் சன்னதி, பக்திசாரர் என்கிற திருமழிசை ஆழ்வார் சன்னதி, ஆண்டாள் சன்னதி மற்றும் இராமானுசர் சன்னதி ஆகியவையும் உள்ளன. வைகாநச ஆகம முறைப்படி பூசைகள் நடக்கும் இக்கோயிலின் தலவிருட்சம் பாரிஜாதம் மற்றும் தீர்த்தம் பிருகு புஷ்கரணி ஆகும்.[5]

2022ஆம் ஆண்டு சூலை மாதம் ஏழாம் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கிய இக்கோயிலின் ஆனி பிரம்மோத்சவத் திருவிழாவின் தேரோட்டம் சூலை 14ஆம் நாள் நடைபெற்றது. மொத்தம் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்பட்டது.[6] 2023ஆம் ஆண்டு சூன் மாதம் 27ஆம் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆனி பிரம்மோத்சவத் திருவிழாவின் தேரோட்டம் சூலை மாதம் மூன்றாம் நாள் நடைபெற்றது.[7][8]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads