திருமாவளவன் (கவிஞர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருமாவளவன் (1955 - 5 அக்டோபர் 2015)[1] இலங்கைக் கவிஞர்.[2][3] இவரது இயற்பெயர் கனகசிங்கம் கருணாகரன். யாழ்ப்பாணம் வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யூனியன் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத்தில் கட்டிட தொழில்நுட்ப மேற்பார்வையாளராக பணிபுரிந்தார். மறைந்த கலைச்செல்வனின் சகோதரர். புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வந்தவர்.[3]
![]() | இந்த article விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கோ கலைக்களஞ்சிய கொள்கைகளுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம். இதனை நீக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது.
நீக்க வேண்டியதற்கான காரணம்: குறிப்பிடத்தக்கமை. மேலும் கருத்துகளை இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். |
Remove ads
வெளிவந்த நூல்கள்
- யுத்தத்தைத் தின்போம் 1999 (மூன்று கவிகளின் தொகுப்பு)[3]
- பனிவயல் உழவு 2000 எக்ஸில் வெளியீடு, பிரான்ஸ்.[3]
- அஃதே இரவு அஃதே பகல் 2003 மூன்றாவது மனிதன் வெளியீடு, இலங்கை.[3]
- இருள்யாழி 2008, காலச்சுவடு வெளியீடு.[3]
இதழியல் பங்களிப்பு
கனடாவில் இருந்து வெளிவந்த 'ழ'கரம் (1996-1997) சிற்றிதழின் இணையாசிரியராக இருந்தார்.
விருது
கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் திருமாவளவனின் 'இருள்யாழி' கவிதைநூலுக்கு பேராசிரியர் ஆ.வி. மயில்வாகனம் ஞாபகார்த்த விருது வழங்கியது.[3]
மறைவு
திருமாவளவன் புற்றுநோயின் தாக்கிய நிலையில்,[2] 2015 அக்டோபர் 5 ஆம் நாள் டொராண்டோ, இசுக்கார்பரோ நகரில் காலமானார்.[1]
மேற்கோள்கள்
வெளி இணைப்ப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads