திருவனந்தபுரம் மத்திய தொடருந்து நிலையம்
கேரளத்தின் தலைநகரில் உள்ள தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருவனந்தபுரம் சென்ட்ரல் கேரள மாநிலத்தின் பெரியதும் போக்குவரத்து மிகுந்ததுமான ஒரு இரயில் நிலையமாகும். மேலும் தென்னிந்தியாவின் முக்கியமான இரயில் நிலையமும் ஆகும். இந்த இரயில் நிலையக் கட்டிடம் நகரின் முக்கியமான கட்டிடங்களுள் ஒன்று. இது சிறீ சித்திரைத் திருநாள் மகாராசாவினால் 1931-இல் கட்டப்பட்டது. இது செங்கற்களால் அல்லாமல் முற்றிலும் கருங்கற்களாலேயே கட்டப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு வரை செல்லும் நீண்ட இரயில் பாதையில் திருவனந்தபுரமே முதலில் வரும் பெரிய இரயில் நிலையம். இங்கு தினமும் 2,00,000 பயணிகள் வரை வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
Remove ads
வசதிகள்
இந்த நிலையத்தில் கீழ்க்காணும் வசதிகள் உண்டு.[1]
- வாகன நிறுத்துமிடம்
- மின் ஏணிகள்
- நடை மேம்பாலம்
- பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகம்
நின்று செல்லும் வண்டிகள்
மேலும் பார்க்க
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads