திருவாரூர் கைலாச நாதர் கோயில்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருவாரூர் கைலாச நாதர் கோயில் என்பது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயிலாகும்.

விரைவான உண்மைகள் கைலாசநாதர் கோயில், அமைவிடம் ...
Remove ads

அமைவிடம்

இக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக கைலாச நாதர் உள்ளார். இங்குள்ள இறைவி மாணிக்கவல்லி ஆவார். கைலாசம் செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து வணங்கினால் சிறப்பு என்று கருதுகின்றனர்.[1]

அமைப்பு

இக்கோயில் இரண்டு நிலை ராஜகோபுரத்துடன் மேற்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. தியாகராஜர் கோயிலை நோக்கிய நிலையில் காணப்படுகிறது.சிவனுக்கு வலது புறம் விநாயகரும், இடது புறம் முருகனும் காணப்படுகின்றனர். சண்டிகேசுவரர் சன்னதி இக்கோயிலில் உள்ளது.[1]

திருவிழாக்கள்

மாசி மகம், பிரதோஷம், அமாவாசை, ஆருத்ரா தரிசனம், பங்குனி உத்திரம், சிவராத்திரி போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads