திருவிளநகர் உசிரவனேசுவரர் கோயில்

இந்தியாவில் உள்ள இந்து கோவில் From Wikipedia, the free encyclopedia

திருவிளநகர் உசிரவனேசுவரர் கோயில்
Remove ads

திருவிளநகர் உசிரவனேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 40ஆவது சிவத்தலமாகும்.

விரைவான உண்மைகள் தேவாரம் பாடல் பெற்ற திருவிளநகர் உசிரவனேசுவரர் திருக்கோயில், பெயர் ...
Remove ads

அமைவிடம்

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் வேடுவ வேடத்தில் வந்து சம்பந்தருக்கு ஆற்றைக் கடக்க உதவினார் என்பது தொன்நம்பிக்கை.

இறைவன், இறைவி

இக்கோயிலில் உள்ள இறைவன் உசிரவனேசுவரர்,இறைவி வேயுறுதோளியம்மை.

அமைப்பு

இத்திருக்கோயில் ஞாழற் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலி பீடம், நந்தி காணப்படுகின்றன. இடப்புறம் ஆஸ்தான மண்டபம் உள்ளது. அடுத்து உள்ளே செல்லும்போது இடப்புறம் நடராஜர் சன்னதியும், நவக்கிரக சன்னதியும் உள்ளன. மூலவர் சன்னதியில் துறை காட்டும் வள்ளலார் உள்ளார். அவரது சன்னதிக்கு இடப்புறம் வேயுறுதோளியம்மை சன்னதி உள்ளது. மூலவருக்கு முன் பலிபீடம், நந்தி உள்ளது. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, துர்க்கை உள்ளனர். திருச்சுற்றில் விநாயகர், சோமாஸ்கந்தர், வள்ளி தெய்வானையுட்ன் கூடிய சுப்பிரமணியர், நால்வர், அருணாசலேஸ்வரர், கஜலட்சுமி ஆகியோர் உள்ளனர்.

குடமுழுக்கு

1929 சூன் 1929 மற்றும் 2 பிப்ரவரி 1959 ஆகிய நாள்களில் குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டுகள் உள்ளன. தற்போது (நவம்பர் 2016) கோயிலில் திருப்பணி நடைபெற்று வருகிறது.

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

படத்தொகுப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads