திருவிழா ஜெயசங்கர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருவிழா ஜெயசங்கர் (பிறப்பு: சனவரி 31, 1937) தென்னிந்தியாவைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர் ஆவார்.[1]
ஆரம்ப கால வாழ்க்கை
ஜெயசங்கர் ஆரம்பத்தில் தனது தாத்தா திருவிழா சங்கு பணிக்கரிடம் நாதசுவர இசையினைக் கற்றார். பின்னர் தனது தந்தை திருவிழா ராகவ பணிக்கரிடம் பயிற்சி மேற்கொண்டு, அவருடன் இணைந்து மத்திய திருவாங்கூரின் கோயில்களில் நாதசுவரம் இசையினை வழங்கினார்.
தொழில் வாழ்க்கை
தவில் கலைஞர் வலயப்பட்டி சுப்பிரமணியத்துடன் இணைந்து இவர் நிகழ்த்திய இசை நிகழ்ச்சிகள், தென்னிந்தியா முழுவதும் பெரும் வரவேற்பினைப் பெற்றன. வெட்டிக்காவலா சசிகுமார், கரிப்பத் முருகதாஸ் ஆகியோர் ஜெயசங்கரின் குறிப்பிடத்தக்க மாணாக்கர் ஆவர்.
பெற்றுள்ள விருதுகளும் பட்டங்களும்
- இசைப்பேரறிஞர் விருது, 1997. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[2]
- சங்கீத நாடக அகாதமி விருது, 2013[3]
மேற்கோள்கள்
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads