தி. ந. இராமச்சந்திரன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

முனைவர் தில்லை நடராஜன் இராமச்சந்திரன் (T. N. Ramachandran; 18 ஆகத்து 1934 - 6 ஏப்ரல் 2021) தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ் சைவம் குறித்தும் சைவ சித்தாந்தம் குறித்தும் பல நூல்களை எழுதியவர். சேக்கிழார் அடிப்பொடி எனும் சிறப்பு பட்டத்தைப் பெற்றவர்.[1]

விரைவான உண்மைகள் தில்லை நடராஜன் இராமச்சந்திரன், பிறப்பு ...

சைவத் தமிழ் திருத்தொண்டர்களின் வாழ்க்கை வரலாற்றியல் இலக்கியமான சேக்கிழாரின் பெரியபுராணம், சைவ சித்தாந்தம் ஆகியவை குறித்து தமிழிலும், ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியவர்.[2]

Remove ads

இளமை

தில்லை நடராஜன் – காமாட்சியம்மாள் இணையருக்கு 18 ஆகஸ்டு 1934ல் பிறந்த இராமச்சந்திரன், சட்டக் கல்வி பயின்று 9 ஆகஸ்டு 1956 முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 13 செப்டம்பர் 1956ல் கல்யாணி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

விருதுகள்

  • மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழாவின் போது தி. ந. இராமச்சந்திரன் சிறப்பு செய்யப்பட்டார். 1984ல் இராமச்சந்திரனின் சைவப் பணியைப் பாராடி தருமபுர ஆதீனம் சைவ சித்தாந்த கலாநிதி பட்டத்தை வழங்கியது.
  • தி. ந. இராமச்சந்திரன், தெய்வச் சேக்கிழாரின் பெரியபுராணம் குறித்து தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியதால், சேக்கிழார் அடிப்பொடி எனும் பாராட்டைப் பெற்றார்.
Remove ads

படைப்புகள்

தி. ந. இராமச்சந்திரன் தமிழிலும், ஆங்கிலத்திலும் பல சைவத் தமிழ் நூல்களை இயற்றியுள்ளார். அவைகளில் சில: [3]

  • பெரியபுராணம் திருமுறைகளின் கவசம்[4]
  • பாரதி பாடல்கள் சிந்தனை விளக்கம்
  • Tirumurai the Second
  • Tirumurai The Seventh
  • SAYINGS
  • UTTERANCES
  • Kaivalya Navaneetham
  • Brahmmasuthra Siva Advaitha
  • Chitrakavi Maalai
  • Max Mullar

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads