தூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில்

From Wikipedia, the free encyclopedia

தூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில்
Remove ads

தூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில் (திருஆருர்ப் பரவையுள் மண்டளி) சுந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 89ஆவது சிவத்தலமாகும்.முன்பு, இத்திருக்கோயில் கடலிலுள் மண்கோயிலாக அமைந்திருந்தது என தலவரலாறு குறிப்பிடுகிறது.

விரைவான உண்மைகள் தேவாரம் பாடல் பெற்ற திருஆருர்ப் பரவையுள் மண்டளி தூவாய் நாதர் திருக்கோயில், பெயர் ...
Remove ads

அமைவிடம்

இத்திருக்கோயில் திருவாரூர் கோயிலின் தேர் நிலைக்கு அருகில், கிழக்கு ரத வீதியில் அமைந்துள்ளது.

அமைப்பு

Thumb
விமானம்

ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன. மூலவர் முன்பாக இடது புறத்தில் விநாயகர் உள்ளார். திருச்சுற்றில் விநாயகர், சுப்ரமணியர், சனீசுவரன், இறைவி, சண்டிகேசுவரர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

இறைவன், இறைவி

இக்கோயிலில் உள்ள இறைவன் தூவாய் நாதர், இறைவி பஞ்சின் மென்னடியாள்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

இவற்றையும் பார்க்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads