தொட்டமஞ்சு
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தொட்டமஞ்சு ( Doddamanchi ) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டத்தைச் சேர்ந்த, தளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு மலை கிராமம் ஆகும்.[1] இந்த ஊர் மாவட்டத் தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 66 கி.மீ. தொலைவிலும், தளியில் இருந்து 8 கி.மீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 329 கி.மீ. தொலைவில் உள்ளது. அருகில் உள்ள வானூர்தி நிலையம் பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த ஊரில் தொடர் வண்டி நிலையம் கிடையாது. அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் கெலமங்கலம் தொடர்வண்டி நிலையம் ஆகும்.
Remove ads
மக்கள் வகைப்பாடு
இந்த கிராமத்தில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த ஊரில் 1225 வீடுகளும், மொத்த மக்கள் தொகையானது 2937 ஆக உள்ளது. இதில் பெண்கள் விகிதம் 48.6% என்றும், மொத்த எழுத்தறிவு விகிதம் 22.4% ஆகும், இதில் பெண்களின் எழுத்தறிவு விகிதமானது 8.0%. என்று உள்ளது.[2]
கோயில்கள்
இங்கு புகழ்பெற்ற மஞ்சு மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.
படத்தொகுப்பு
”மஞ்சு மாரியம்மன் கோயில்” ”மஞ்சு மாரியம்மன் கோயில் உள்ளே” ”மஞ்சு மாரியம்மன் கோயில் உற்சவர்”
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads