தொல்காப்பியத்தில் தமிழிசை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தொல்காப்பியத்தில் தமிழிசை பற்றிய குறிப்புகள் உள்ளன. பழந்தமிழ் இலக்கண நூல்களுள் முழுமையாகக் கிடைக்கும் நூல் தொல்காப்பியம். இது தொல்காப்பியர் என்பவரால் எழுதப்பட்டது. எழுத்து, சொல், பொருள் என்ற தமிழ் இலக்கணம் கூறும் நூல் இது. இசைத்தமிழ், தொடர்பான செய்திகளை இந்நூல் ஆங்காங்கு கூறுகிறது. தமிழிசை பற்றிய நூல்களில், இன்று கிடைக்கப் பெறுகின்ற மிகத் தொன்மையான நூல் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியர் காலம் கி.மு. 8 ஆம் நூற்றாண்டளவினது என்பது அறிஞர்கள் கருத்து. இந்நூலின் காலக் கணிப்பு தமிழர் இசையின் தொன்மையை உறுதிப்படுத்தும். இருவகை இசை, இசைக் கருவிகள் பற்றி தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. ஒன்று தொழிலிசை, மற்றையது இன்ப இசை. தொழிலிசைக் கருவி பறை என்றும், இன்ப இசைக் கருவி யாழ் என்றும் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு திணைகளுக்கும் உரிய தொழிலிசை, இன்ப இசை பற்றியும் இது குறிப்பிடுகிறது.[1]

Remove ads

இசை பற்றிய குறிப்புகள்

இசைப்பு என்பது யாழ் போன்ற இசைக்கருவிகளை இசைத்தல் ஆகும் என்பது இந்நூற்பாவின் பொருள்.

இசையொடு பொருந்திய யாழ் நூலில் இசையிலே எழுத்து ஒலிகள் அளவுகடந்து ஒலித்தலும், ஒற்றுக்கள் நீண்டு ஒலித்தலும் உண்டு என்று அறிஞர் கூறுவர் என்பது இதன் பொருள்.

இசையைத் தொழிலாக கொண்ட மக்கள் உபயோகப்படுத்தும் இசைக்கருவிக்குப் பறை என்றும், இன்பமாக பொழுது போக்கும் மக்கள் பயன்படுத்தும் இசைக்கருவி யாழ் என்றும் தொல்காப்பியத்தில் இருவகை இசைக்கருவிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர், தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியல் 18 ஆம் நூற்பா தமிழர் வாழ்க்கை நெறியின் அடிப்படைப் பண்பாட்டுக் கருவூலங்களைக் குறிப்பிடுகிறது.

இங்கு தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, யாழ் ஆகிய பொருள்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த ஏழும் தமிழர் பண்பாட்டுக் கருப்பொருள்கள். ஏழு கருப்பொருளில் ஒன்று யாழ். மற்றொன்று பறை.

யாழ்

தொல்காப்பியம் கூறும் ‘யாழ்’ என்னும் சொல் பழந்தமிழர் வகுத்த பண்ணிசையைக் குறிக்கும். இது மிடற்றிசை (குரலிசை), நரம்புக் கருவியிசை (யாழ் என்னும் தந்திக் கருவி இசை) காற்றுக் கருவியிசை (குழல் கருவியிசை)ஆகியவற்றின் முறைகளும் மரபுகளும் பற்றியதாகும். இசைநூலை ‘நரம்பின் மறை’ எனவும் தொல்காப்பியர் குறித்துள்ளார். நரம்பு என்றதும் உடல் மருத்துவம் சார்ந்த நூல் என்று நினைத்துவிடக் கூடாது என்பதற்காகவே ‘இசையொடு சிவணிய நரம்பின் மறை’ என்றார். யாழ் என்ற சொல் தொல்காப்பியத்தில் மூன்று இடங்களில் வருகிறது. கந்தருவர்களைக் குறிக்கும் விதமாக 1) ‘யாழோர்’ எனவும் 2) 'நல் யாழ்த் துணைமையோர்’ எனக் குறித்துள்ளார். பண்கள் யாழில் தோன்றுவதால் பண்களையே யாழ் எனக் குறிக்கும் வழக்கம் அப்போது இருந்ததால், பெரும்பண்கள் யாழ் எனவும், (உதாரணம் முல்லைப்பண் என்பதை முல்லை யாழ்) சிறுபண்கள் அல்லது திறப்பண்களை 3) ’யாழின் பகுதி’ எனவும் பொருள் படும்படி தொல்காப்பியர் குறிப்பிட்டார். இதனால், பண்டைநாளில், நரம்புக் கருவியாகிய யாழினை அடிப்படையாகக் கொண்டே பண்களும் அவற்றின் திறங்களும் ஆராய்ந்து வகைப்படுத்தப்பட்டன என அறியலாம்.

பறை

தொல்காப்பியர் கூறும் "பறை" என்னும் சொல் தாளம் பற்றியதாகும். அதாவது தாளத்தைக் கொட்டிக் கொடுக்கும் பல்வேறு தாளக்கருவிகளின் (percussion instruments) முறைகளும் மரபுகளும் பற்றியதாகும்.

ஐந்துதிணைக்குரிய பண்களும், அதற்குரிய காலமும்

நிலத்தை ஐந்தாக வகுத்துக் கொண்ட தமிழர் அந்தந்த நிலத்துக்குரிய இசையை உருவாக்கினர். தொல்காப்பியர் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களுக்கும் உரிய தொழில் இசையையும, இன்ப இசையையும் தெளிவாக வகுத்து வைத்துள்ளார். பண் இசைப்பதற்குரிய பொழுதையும் வரையறை செய்துள்ளார்.[6]

நிலம் பெரும்பண் / யாழ் சிறுபண் / யாழின் பகுதி முழக்கிய பறை தொழுத தெய்வம் பண்ணிற்குரிய சிறுபொழுது
குறிஞ்சிகுறிஞ்சிப்பண் படுமாலைப்பாலை (நடபைரவி) சிறுகுறிஞ்சி செந்துருத்தி (மத்தியமாவதி)வெறியாட்டுப் பறை,
தொண்டகப் பறை
சேயோன் என்னும்முருகன்யாமம் அல்லது நள்ளிரவு
முல்லைமுல்லைப்பண் செம்பாலை (அரிகாம்போதி) சிறுமுல்லை முல்லைத்தீம்பாணி (மோகனம்)ஏறுகோட்பறைமாயோன் என்றதிருமால்மாலை
மருதம்மருதப்பண் கோடிப்பாலை (கரகரப்ரியா) சிறுமருதம் ஆம்பல் (சுத்ததன்யாசி)நெல்லரி, மணமுழவுவேந்தன் என்றஇந்திரன்விடியல்
நெய்தல்நெய்தல் பண் விளரிப்பாலை (தோடி) சிறுநெய்தல் இந்தளம் (ஹிந்தோளம்)மீன் கோட் பறைவருணன்ஏற்பாடு
பாலைபாலைப்பண் அரும்பாலை (சங்கராபரணம்) சிறுபாலை கொன்றை (சுத்தசாவேரி)துடிகொற்றவைநண்பகல்
  • யாழ் / பண்கள் குறித்து மேற்சொல்லப்பட்ட அடிப்படைத் தகவல்கள், வீ.ப.கா சுந்தரம் எழுதிய ‘தமிழிசைக் கலைக் களஞ்சியம்' தொகுதி 1 பக்கங்கள் 328, 160 இவற்றில் காணலாம். பழந்தமிழ் இசை#பழந்தமிழிசையில் பண்கள் எனும் பக்கத்திலும் காணலாம்.

இசை என்ற சொல் தொல்காப்பியத்தில் 24 இடங்களில் வந்துள்ளது. இவை அனைத்தும் இசைக் கலையுடன் ஒரு வகையில் தொடர்பு உள்ளதாகவே அமைந்துள்ளது.

தொல்காப்பியர் குறிப்பிடும் பாட்டு, வண்ணம் ஆகிய சொற்கள் இசையோடு தொடர்புடைய ஆழ்ந்த பொருள் பொதிந்த சொற்களாகவே அமைந்துள்ளன. தொல்காப்பியர் வண்ணத்தை 20 வகையாகப் பிரித்துப் பெயர்களைச் சுட்டி நூற்பா இயற்றியுள்ளார். இவ்வண்ணங்களை வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணம் என இசைத்தன்மையை உயர்த்தும் வகையில் அமைத்துள்ளார். தொல்காப்பியர் பாடல்களை அவற்றின் அமைப்பு, கருத்து மற்றும் இசைத்தன்மையைக் கொண்டு பாகுபாடு செய்துள்ளார். கலிப்பாவும், பரிபாடலும் இவ்வகையில் குறிப்பிடத்தகுந்தன, பரிபாட்டு என்பது இசைப்பா என பேராசிரியர் குறிப்பிடுகிறார். பிசியைப் போன்ற இயல்புடையதாகப் பண்ணத்தி என்னும் இசைப்பாடல் இருப்பதைத் தொல்காப்பியத்தின் வழி அறியலாம். ஊடல்தீர்க்கும் வாயில்களாகத் தொல்காப்பியர் குறிப்பிடும் பாணன், கூத்தன், பாடினி, விறலி ஆகியோர் இசையிலும் கூத்திலும் திறமை உடையவர்கள் என்பதைச் சங்க இலக்கியத்தின் வாயிலாக அறிய முடிகிறது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads