நங்கவரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நங்கவரம் (ஆங்கிலம்:Nangavaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், குளித்தலை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். நான்கு வருவாய் கிராமங்கள் வடக்கு-(1,2) தெற்கு-(1,2) உள்ளன.
இவ்வூர் சோழர் காலத்தில் நங்கை பிரமதேயமான அரிஞ்சிகைச் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது.[1]
Remove ads
தொழில்கள்
காவிரி ஆறு அருகில் இருப்பதால் விவசாயம் முதன்மைத் தொழிலாகும். உய்யக்கொண்டன், கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் பாசனம் பெருகிறது.மண்வளமும் நீர்வளமும் இருப்பதால் [[வாழை], [கோரை புல்],[ கரும்பு], [நெல் ]]பயிர்கள் அலங்கரிக்கும். குறிப்பாக நெல் இங்கு அதிகம் பயிரிடப்படுகிறது. குளித்தலைக்கு மேற்கே லாலாப்பேட்டை என்ற ஊரிலிருந்து கிழக்கே நங்கவரம் வரையில் பகுதிகளில் பயிரிடப்படும் பல்வேறு தரப்பட்ட நெல் ரகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. தமிழகத்தின் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அதிகம் ஏற்றுமதி ஆகிறது.
Remove ads
அமைவிடம்
கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கரூர்- 60 கி.மீ., குளித்தலை-18 கி.மீ., திருச்சிராப்பள்ளி-20 கி.மீ., பெருகமணி இரயில் நிலையம் -2.5 கி.மீ., முக்கொம்பு சுற்றுலாத்தலம்-6 கி.மீ. தொலைவில் நங்கவரம் பேரூராட்சி அமைந்துள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
18 வார்டுகள் கொண்ட நங்கவரம் பேரூராட்சி குளித்தலை (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]
சிற்றூர்கள்
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,477 வீடுகளும், 17,629 மக்கள்தொகையும் கொண்டது.[3] [4]
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads