நந்தா ஏரி

கோவாவில் உள்ள ஈரநிலம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நந்தா ஏரி (Nanda lake) என்பது இந்தியாவின் கோவா மாநிலத்தில் அமைந்துள்ள ராம்சர் சதுப்பு நிலமாகும். இந்த ஈரநிலம் 0.42 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.[1] தெற்கு கோவா மாவட்டத்தில் கர்கோரம் நகரத்தில் இந்த ஈரநிலம் 0.42 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. நந்தா ஏரி கோவாவின் முதல் மற்றும் ஒரே ராம்சார் ஈரநில தளமாகும்.[2]

வரலாறு

2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஈரநிலம் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை விதிகளின் கீழ் 2021 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் நந்தா ஏரியை ஈரநிலமாக அறிவித்தது.[2] 2022 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் ஆறாம் தேதியன்று நடைபெற்ற 2022 ராம்சர் மாநாட்டில் ராம்சர் ஈரநில தளமாகவும் அறிவிக்கப்பட்டது.[1]

விலங்கினங்கள்

சிவப்பு-மூக்கு ஆள்காட்டி, வெள்ளை அறிவாள் மூக்கன், தாமிர இறக்கை இலைக்கோழி, செம்பருந்து, சிறு நீல மீன்கொத்தி, கம்பிவால் தகைவிலான், வெண் கொக்கு, சின்ன நீர்க்காகம், சிறிய சீழ்க்கைச்சிரவி போன்ற பறவையினங்களுக்கு நந்தா ஏரி தாயகமாக உள்ளது.[2]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads