நாராயண்கஞ்ச்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நாராயண்கஞ்ச் (வங்காளம்: নারায়ণগঞ্জ Naraeongônj) வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவை அடுத்துள்ள நகரமாகும். நாயண்கஞ்ச் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இதன் மக்கள்தொகை 220,000 ஆகும். சீதாலக்யா ஆற்றின் கரையில் இந்த நகரம் அமைந்துள்ளது. நாராயண்கஞ்ச் ஆற்றுத்துறைமுகம் வங்காளதேசத்தின் மிகப் பழமையான துறைமுகங்களில் ஒன்றாகும். [1] சணல், துணி தொழில்களுக்கு வணிக மையமாக விளங்குகிறது.இங்குள்ள ஏராளமான சணல் ஆலைகளை ஒட்டி இது வங்காளதேசத்தின் டுண்டி எனப்படுகிறது. (டுண்டி சணல் தொழிலுக்கு புகழ்பெற்ற இசுக்கொட்லாந்திலுள்ள நகரமாகும்.)

இக்கட்டுரை நாராயண்கஞ்ச் நகரைக் குறித்தது. நாராயண்கஞ்ச் மாவட்டம் வேறானது.
விரைவான உண்மைகள் நாராயண்கஞ்ச், வங்காளதேசம் নারায়ণগঞ্জ, நாடு ...
Remove ads

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads