நிலச்சரிவு

பாறைத் துகள்கள் சிதைவடைந்து கீழே விழுதல் From Wikipedia, the free encyclopedia

நிலச்சரிவு
Remove ads
Remove ads

நிலச்சரிவு அல்லது பாறைச்சரிவு(Landslides, also known as landslips, or rockslides,)[1][2][3] என்பது மலை உள்ளிட்ட சாய்வாக உள்ள நிலப்பகுதிகளில் உள்ள கற்கள், பாறைகள், மணல் கலவை சரிவு நோக்கி கீழே நகர்வது ஆகும்.[4] மலைத்தொடர்கள் முதல் கடலோர பாறைகள் அல்லது நீருக்கடியில் கூட செங்குத்தான அல்லது லேசான சரிவுகளில் ஏற்படும் நகர்வுகளும் நிலச்சரிவாக வகைப்படுத்தப்படும்.[5] இதில் அவை நீர்மூழ்கி நிலச்சரிவுகள் என்று அழைக்கப்படுகின்றன.

Thumb
ஆப்பிரிக்கா, நைஜீரியாவில் நிலச்சரிவுகள்
Thumb
நைஜீரியாவில் பாறை சரிவுகள்
Thumb
2018 இல் பெரு, கஸ்கோ, பெரு அருகே நிலச்சரிவு
உலகெங்கிலும் சாத்தியமான நிலச்சரிவு செயல்பாடு எவ்வாறு மாறுகிறது என்பதைப் பார்க்க நாசாவால் உருவாக்கப்பட்ட மாதிரி.
Thumb
கலிபோர்னியாவின் சான் மேடியோ கவுண்டியில் நிலச்சரிவின் இயங்குபடம்
Thumb
நிலச்சரிவுகள்

நிலச்சரிவு ஏற்படுவதற்கு ஈர்ப்பு விசை முதன்மையான உந்து சக்தியாக உள்ளது. ஆனால் சரிவான நிலத்தின் நிலைத்தன்மையை பாதிக்கும் பிற காரணிகளும் உள்ளன. பல சந்தர்ப்பங்களில், நிலச்சரிவு ஒரு குறிப்பிட்ட நிகழ்வால் தூண்டப்படுகிறது (அதாவது கடுமையான மழைப்பொழிவு, நிலநடுக்கம், சாலை அமைப்பதற்காக வெட்டப்படும் சாய்வு வெட்டு, மற்றும் பல), இருப்பினும் இதை அடையாளம் காணவியலாது.

மனித வள மேம்பாடு (நகர்ப்புற வளர்ச்சி போன்றவை), இயற்கை வளங்களை சுரண்டுதல் (கனிமச் சுரங்கம், காடழிப்பு) போன்றவை நிலச்சரிவுகள் அடிக்கடி ஏற்பட காரணமாகின்றன.[6] மேலும் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழலில் மனித தாக்கத்தால் ஏற்படும் புவி வெப்பமயமாதல், நிலசரிவுகளைத் தூண்டும் இயற்கை நிகழ்வுகள் (மோசமான வானிலை போன்றவை) நிலச்சரிவுக்கு காரணமாக இருக்கலாம்.[7] நிலச்சரிவு தணிப்பு என்பது நிலச்சரிவுகளில் மனித தாக்கங்களின் அபாயத்தை குறைப்பதற்கான கொள்கை மற்றும் நடைமுறைகளை விவரிக்கிறது, இயற்கை பேரழிவு அபாயத்தை குறைக்கிறது.

Remove ads

காரணங்கள்

Thumb
1950 ஸ்வீடனில் உள்ள சுர்டே என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு. 1950 ஸ்வீடனில் உள்ள சுர்டே என்ற இடத்தில் நிலச்சரிவு. விரைவான களிமண் சரிவான இதில் ஒரு மனிதர் கொல்லபட்டார்.

சாய்வாக உள்ள நிலப்பகுதி (அல்லது அதன் ஒரு பகுதி) அதன் நிலைத்தன்மை இழக்க காரணமான சில செயல்முறைகளுக்கு உள்ளாகும்போது நிலச்சரிவு உண்டாகிறது. ஒரு சரிவுப் பகுதியின் நிலைத்தன்மையில் மாற்றம் ஏற்படுவதற்கு பல காரணிகள் இருக்கின்ற. நிலச்சரிவுக்கான இயற்கை காரணங்கள் பின்வருமாறு:

  • மழை நீர ஊடுருவல், பனி உருகுதல், பனிப்பாறைகள் உருகுதல் போன்றவற்றால் நிலத்தடியில் கூடுதல் நீர் செறிவு ஏற்பட்டு அதன் எடை கூடுதல்;[8]
  • நிலத்தடி நீர் உயருதல் அல்லது நுண்துளை நீர் அழுத்தம் அதிகரிப்பு (எ. கா. மழைக்காலங்களில் நீலத்தடி நீர் உயர்வு, அல்லது நிலத்தில் மழை நீர் ஊடுருவல் காரணமாக);[9]
  • விரிசல் மற்றும் ஆழப் பிளவுகளில் நீர்மத்தின் அழுத்தம் அதிகரிப்பு;[9][10]
  • நிலத்தின் மீது வளரும் தாவரங்கள் அழிபடுவதால் நிலத்தில் பிடிமானம் இல்லாமல் போதல் (எ. கா; காட்டுத்தீக்குப் பிறகு)[11]
  • ஆறுகள் அல்லது கடல் அலைகளால் ஒரு சரிவின் மேற்புரத்தில் ஏற்படும் அரிப்பு ;[12]
  • இயற்பொருள் மற்றும் வேதியியல் வானிலை (எ. கா; மீண்டும் மீண்டும் உறைபனி ஏற்படுதல் மற்றும் கரைதல், வெப்பமாகுதல் மற்றும் குளிர்தல், நிலத்தடி நீரில் உப்பு கசிதல் அல்லது கனிமக் கரைப்பு காரணமாக);[13][14][15]
  • நிலநடுக்கத்தால் தரையில் ஏற்படும் நடுக்கம். இது சரிவான நிலப்பகுதியை நேரடியாக சீர்குலைத்தோ அல்லது பலவீனப்படுத்தியோ நிலச்சரிவை உருவாக்கும் விரிசல்களை ஏற்படுத்தலாம்;[10][16][17]
  • எரிமலை வெடிப்புகள்;[18]
  • நுண்துளை நீர்மக் கலவையில் உண்டாகும் மாற்றங்கள்;[19]
  • வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் (பருவகால அல்லது காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்டவை).[20][21]

மனித நடவடிக்கைகள் நிலச்சரிவுக்கு காரணமாகின்றன, அவை:

  • காடழிப்பு, உழவு, கட்டுமானம்;
  • இயந்திரங்கள் அல்லது போக்குவரத்தால் ஏற்படும் அதிர்வுகள்;[22]
  • வெடிவைத்தல் மற்றும் சுரங்கநடவடிக்கைகள்;[23]
  • மண்வேலை (எ. கா. ஒரு சரிவின் வடிவத்தை மாற்றுவது, அல்லது புதிய சுமைகளை ஏற்றுவதன் மூலம்);
  • மண்ணின் கெட்டித் தன்மைக்கு வலு சேர்க்கும் , ஆழமான வேரூன்றிய தாவரங்களை அகற்றுதல்;
  • வேளாண்மை அல்லது வனவியல் நடவடிக்கைகள் (மரம் வெட்டுதல்), மற்றும் நகரமயமாக்கல், இது மண்ணில் ஊடுருவும் நீரின் அளவை மாற்றுகிறது.
  • நிலப் பயன்பாடு மற்றும் நிலப்பரப்பில் ஏற்படும் தற்காலிக மாறுபாடு (LULC): இது வேளாண் பகுதிகளை மனிதர்கள் கைவிடுவதும் அடங்கும், எ.கா. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் சமூக மாற்றங்கள் காரணமாக. நிலச் சிதைவு மற்றும் அதிக மழைப்பொழிவு ஆகியவை மண்ணரிப்பு மற்றும் நிலச்சரிவு நிகழ்வுகளின் அதிர்வெண்ணை அதிகரிக்கும் காரணியானது.[6]
Remove ads

வகைகள்

Thumb
நிலச்சரிவு வகைகள்

ஹங்கர்-லெரூயில்-பிகரெல்லி வகைப்பாடு

பாரம்பரியமாக நிலச்சரிவு என்ற சொல் புவியின் மேற்பரப்பில் உள்ள பாறைகள் மற்றும் மண்ணடுக்குகள் போன்றவற்றின் கீழ்நோக்கிச் சரியும் அனைத்துவகையான சரிவுகளையும் குறிக்க ஒரு காலத்தில் பயன்படுத்தபட்டது. 1978 ஆம் ஆண்டில், புவியியலாளர் டேவிட் வார்ன்ஸ் இந்த சொல் துல்லியமற்று உள்ளதாகக் குறிப்பிட்டார். நிலச்சரிவு வகைகளைக் குறிப்பிட புதியதாக, மிகவும் நெருக்கமான வரைமுறைகளை முன்மொழிந்தார்.[24] இந்த வறைமுறை பின்னர் 1996 இல் குரூடன் மற்றும் வர்னஸ் ஆகியோரால் மாற்றியமைக்கப்பட்டது,[25] பின்னர் ஹட்சின்சனால் (1988) ,[26] ஹங்ர் . (2001),[27] இறுதியாக ஹங்ர், லெரூயில் மற்றும் பிகாரெல்லி (2014) ஆகியோரால் செப்பம் செய்யப்பட்டது.[4] அண்மைய புதுப்பிப்பின் விளைவாக உருவான வகைப்பாடுகளாக 1, கீழே விழுதல், குப்புறக் கவிழ்தல், 3, சாய்வான நிலப்பகுதி நழுவிச் சென்று விழுதல், 4, பாறை, கல், மண் போன்றவை கலவையாக ஆறு போல பாய்தல் போன்ற வகையான நலச்சரிவுகள் உள்ளன. பெரும்பாலான நிலச்சரிவுகள் 20 முதல் 30 பாகைவரை சாய்வாக உள்ள நிலப்பகுதியிலேயே உண்டாகிறது.[28]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads