நீலம் (மலர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நீலம் என்பது மலர். இது நீலநிறம் கொண்டது.

இது இலங்கை நாட்டின் தேசிய-மலர். நீலமலர் எது என வரையறுப்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன[1]. இவற்றில் இளநீல-நிற மலர் வேறு, இருள்நீல-நிற மலர் வேறு என்னும் உண்மை தெளிவாகிறது.
சங்கப்பாடல்களில் நீலமலர்
- வெவ்வேறு மலர்கள்
- பருவம்
- ஊதைக்காற்று வீசும் காலத்தில் மிகுதியாக மலரும். [6]
- இலைகள்
- நீலமலர், சேம்பு ஆகியவற்றின் இலைகள் ஒன்றுபோல இருக்கும். [7] நீரில் பூக்கும் நீலமலர்களின் இலைப்பச்சையை நிலத்தில் வளரும் பயிர்ப்பச்சைக்கு உவமையாக எடுத்துக்கஃ காட்டுவர். [8] [9] [10]
- மலரின் இதழ்கள்
- நீளமாக இருக்கும். [11] நீல நிறத்தில் இருக்கும். [12] [13] வள்ளம்போல் சற்றே குழிவாக இருக்கும். [14] இதழ்கள் பலவாக இருக்கும். [15]
- மலரின் நிறம்
- வானத்துக் கருமேகம் போலப் பூக்கும் [16]
- மயிலின் கழுத்து நீல மலர் போல இருக்கும் [17]
- மலரும் நீர்நிலைகள்
- சுனை, [18] உப்பங்கழி, [19] [20] பாட்டங்ககால் என்னும் வாய்க்கால் பகுதியில் நீலம், பாங்கர், முல்லை ஆகிய பூக்கள் மலர்ந்திருந்தன [21]
- மகளிரின் கண் போல் இதழ்
- வண்ணம், நீண்டிருக்கும் ஒருமுனைக்கூர் வட்டம், உட்குழிவு போன்ற நீலமலர் இதழின் தன்மைகளை எண்ணி மகளிரின் கண்களுக்கு நீல-இதழை உவமையாகக் காட்டுவர். [22] [23] [24] [25] (ஆண்களின் கணுகளுக்குத் தாமரை இதழ் உவமையாகக் கூறப்படும்.)
- விற்பனை
- நீலமலர் தலையில் சூடும் பூ. எனவே மகளிர் இதனை விற்பனை செந்தலும் உண்டு. [26]
- காதலனுக்கு விளையாட்டு காட்டும் ஒருத்தி நீல மலரோடும் பாங்கர் மலரோடும் ஒளிந்துகொண்டாள். [27]
Remove ads
இவற்றையும் காண்க
படங்கள்
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads