சங்ககால மலர்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சங்க நூல்களில் காணப்படும் மலர்களைச் சங்ககால மலர்கள் என இங்குக் குறிப்பிடப்படுகிறது. குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் மகளிர் தொகுத்து விளையாடியதாக 99 மலர்களின் பெயர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை அறிஞர்களின் பார்வையில் 103 வரை நீள்கிறது. சில மலர்களின் பெயர்கள் அம்மலர்களைப் பற்றிய விளக்கங்களுடன் அமைந்துள்ளன. இந்தக் கட்டுரையில் அவை 99 என்னும் பார்வையில் தொகுத்து அகரவரிசையில் அடுக்கப்பட்டுள்ளன.


இவற்றைத் தவிர வேறு இலக்கியங்களில் வரும் மலர்கள் தனித்து அகரவரிசை அடுக்கினைப் பெறுகின்றன.
Remove ads
மலர்களின் பருவநிலைத் தமிழ்ப்பெயர்கள்
- அரும்பு - அரும்பும் (தோன்றும்) நிலை
- நனை - அரும்பு வெளியில் நனையும் நிலை
- முகை - நனை முத்தாகும் நிலை
- மொக்குள் - "முகை மொக்குள் உள்ளது நாற்றம்" - திருக்குறள் 1274 (நாற்றத்தின் உள்ளடக்க நிலை)
- முகிழ் - மணத்துடன் முகிழ்த்தல்
- போது - மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை
- மலர் - மலரும் பூ
- பூ - பூத்த மலர்
- வீ - உதிரும் பூ
- பொதும்பர் - பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை
- பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் புதுப்பூக்கள்
- செம்மல் - உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை
Remove ads
குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும் மலர்கள்
குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள மலர்கள் (எதிரில் உள்ள எண் அம்மலர் பாடலில் பயின்றுவந்துள்ள அடியைக் குறிக்கும்)
அ வரிசை
க வரிசை
- 15. கண்ணி - குறு நறுங் கண்ணி 31
- 16. கரந்தை மலர் 41
- 17. கருவிளை - மணிப்பூங் கருவிளை 20
- 18. காஞ்சி 65
- 19. காந்தள் - ஒண்செங் காந்தள் 1
- 20. காயா - பல்லிணர்க் காயா 26
- 21. காழ்வை 92
- 22. குடசம் - வான் பூங் குடசம் 17
- 23. குரலி - சிறு செங்குரலி 61
- 24. குரவம் - பல்லிணர்க் குரவம் 23
- 25. குருக்கத்தி - பைங் குருக்கத்தி 90
- 26. குருகிலை (குருகு இலை) 32
- 27. குருந்தம் (மலர்) - மாயிருங் குருந்தம் 97
- 28. குவளை (மலர்) - தண்கயக் குவளை 4
- 29. குளவி (மலர்) 42
- 30. குறிஞ்சி 5
- 31. கூவிரம் 14
- 32. கூவிளம் 11
- 33. கைதை 63
- 34. கொகுடி - நறுந்தண் கொகுடி 58
- 35. கொன்றை - தூங்கு இணர்க் கொன்றை 72
- 36. கோங்கம் - விரிபூங் கோங்கம் 34
- 37. கோடல் 62
ச வரிசை
- 38. சண்பகம் - பெருந்தண் சண்பகம் 40
- 39. சிந்து (மலர்) (சிந்துவாரம்) 81
- 40. சுள்ளி மலர் 13
- 41. சூரல் 29
- 42. செங்கோடு (மலர்) 7
- 43. செம்மல் 60
- 44. செருந்தி 38
- 45. செருவிளை 19
- 46. சேடல் 59
ஞ வரிசை
- 47. ஞாழல் 56
த வரிசை
- 48. தணக்கம் (மரம்) - பல்பூந் தணக்கம் 69
- 49. தளவம் 54
- 50. தாமரை - முள் தாள் தாமரை 55
- 51. தாழை மலர் 53
- 52. திலகம் (மலர்) 36
- 53. தில்லை (மலர்) - கடி கமழ் கடிமாத் தில்லை 44
- 54. தும்பை 82
- 55. துழாஅய் 83
- 56. தோன்றி (மலர்) - சுடர் பூந் தோன்றி 84
ந வரிசை
- 57. நந்தி (மலர்) 85
- 58. நரந்தம் 94
- 59. நறவம் 86
- 60. நாகம் (புன்னாக மலர்) 87
- 61. நாகம் (மலர்) 95
- 62. நெய்தல் (நீள் நறு நெய்தல்) 52
- 63. நெய்தல் (மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்) 66
- 64 நள்ளிருணாறி 96
ப வரிசை
- 64. பகன்றை 76
- 65. பசும்பிடி 24
- 66. பயினி 21
- 67. பலாசம் 77
- 68. பாங்கர் (மலர்) 67
- 69. பாதிரி - தேங்கமழ் பாதிரி 37
- 70. பாரம் (மலர்) 88
- 71. பாலை (மலர்) 45
- 72. பிடவம் 48
- 73. பிண்டி - பல் பூம் பிண்டி 78
- 74. பித்திகம் 80
- 75. பீரம் 89
- 76. புன்னை - கடியிரும் புன்னை 93
- 77. பூளை - குரீஇப் பூளை 30
- 78. போங்கம் 35
ம வரிசை
வ வரிசை
Remove ads
பிற இலக்கியங்களில் காணப்படும் பிற மலர்கள்
சிலப்பதிகாரம் தொகுத்துக் குறிப்பிடும் மலர்கள்
வைகை ஆற்று மணலில் பல்வகை மலர்கள் உதிர்ந்து கிடந்தன. இந்தத் தோற்றம் மகளிர் தம் இடையில் ஆடையின் மேல் அணியும் மேகலையில் பதிக்கப்பட்டுள்ள பல்வண்ண மணிகள் போல இருந்தது என்கிறார் இளங்கோவடிகள்.[1] இங்கு 23 மலர்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றின் அகரவரிசை.
மணிமேகலை தொகுத்துக்கூறும் மலர்கள்
மணிமேகலை 3 மலர்வனம் புக்க காதையில் புகார் நகரத்து வளர்ப்புப் பூங்காவில் இருந்த மலர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. மணிமேகலையின் சேவடி நிலத்தில் படாமல் இந்த மலர்கள் தாங்கிக்கொண்டனவாம். அவை இங்கு அகர வரிசையில் தரப்படுகின்றன.
பரிபாடல் 11-ல் சில மலர்களின் தன்மைகள் விளக்கப்பட்டுள்ளன.
பரிபாடல் 12 தொகுத்துக் கூறும் மலர்கள்
பரிபாடல் எண் 12-ல் வையையாற்றுக் கரையில் மணக்கும் மலர்கள் சில தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. அவை.
Remove ads
மலர்கள் பற்றிய பன்னோக்குக் குறிப்புகள்
இளவேனிலில் மலரும் பூக்கள் என்று ஐங்குறுநூறு என்னும் நூலில் சில பூக்கள் தொகுத்துக் காட்டப்பட்டுள்ளன. – பாடல் எண் 341-357
- அதிரல் – ஐங்குறுநூறு 345
- எரிக்கொடி – ஐங்குறுநூறு 353
- காயா, ஐங்குறுநூறு 412
- குரவம் - ஐங்குறுநூறு 357
- கொன்றை, ஐங்குறுநூறு 412
- கோங்கம் – ஐங்குறுநூறு 343
- தளவம் ஐங்குறுநூறு 412
- நுணவம் – ஐங்குறுநூறு 342
- நெய்தல், ஐங்குறுநூறு 412
- பலா – ஐங்குறுநூறு 351
- பாதிரி – ஐங்குறுநூறு 346
- பிடவு ஐங்குறுநூறு 412
- புன்கு – ஐங்குறுநூறு 347
- மரவம் - ஐங்குறுநூறு 357
- மராஅம் – ஐங்குறுநூறு 348
- மா – ஐங்குறுநூறு 349
- முல்லை ஐங்குறுநூறு 412
- வேம்பு - ஐங்குறுநூறு 350
பிறர்
- கணவீரம்
- பிற்கால ஔவையார் கொட்டி, அம்பல் நெய்தல் ஆகிய பூக்கள் வெவ்வேறு என்கிறார்.[3]
- நாலடியார் நூல் தரும் செய்தி
- நீரில் மிதக்கும் பூக்களில் குவளை மக்களுக்கு உதவும் நீர்மை(நல்லொழுக்கம்) கொண்ட மேன்மக்கள் போன்ற பூ என்றும், ஆம்பல் மக்களுக்கு உதவாத நீர்மை இல்லாதவர் போன்ற பூ என்றும் நாலடியார் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.[4]
- நெய்தல், கொட்டி ஆகிய மலர்களை மகளிர் சூடிக்கொள்வர் என்கிறது ஒரு பாடல்.[5]
Remove ads
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads