நெய்வணை சொர்ணகடேஸ்வரர் கோயில்
தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சொர்ணகடேஸ்வரர் கோயில் என்பது தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.[1]
Remove ads
அமைவிடம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை வட்டத்தில் ரிஷிவந்தியம்-நெமிலி சாலையில், உளுந்தூர்ப்பேட்டையில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் பாதையில் எறையூர் நிறுத்தத்தில் இருந்து 5.6 கி.மீ தொலைவிலும், உளுந்தூர்ப்பேட்டை கள்ளக்குறிச்சி சாலையில் 7 கி.மீ. தொலைவில் உள்ள ஏ. குமாரமங்கலத்திற்கு வடக்கில் 7 கி.மீ. தொலைவிலும், உளுந்தூர்பேட்டை தொடருந்து நிலையத்திற்கு வடமேற்கே 6 கி.மீ. தொலைவிலும் நெய்வணை உள்ளது.[2]
Remove ads
இறைவன், இறைவி
இத்தலத்தின் மூலவர் சொர்ணகடேஸ்வரர், தாயார் நீலமலர்க்கண்ணி என்றும் பிரஹன்நாயகி என்றும் அழைக்கப்படுகிறார்.[3] இறைவன் பொற்குடம் கொடுத்த நாயனார் என்று குறிப்பிடப்படுகிறார். இத்தலத்தின் தலவிருட்சம் புன்னை மரமாகும்.
அமைப்பு
கோயில் வளாகத்திற்கு முன்பாக பலி பீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. முன் மண்டபத்தில் சந்திரன், சூரியன், நவக்கிரகம், பைரவர், நந்தி, பலி பீடம் காணப்படுகின்றன. திருச்சுற்றில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகர் சன்னதி, லட்சுமி நாராயணர் சன்னதி, காசி விசுவநாதர் விசாலாட்சி சன்னதி, படிகலிங்க சன்னதி ஆகியவை உள்ளன. இடப்புறம் இறைவி சன்னதி உள்ளது. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கா, பிரம்மா உள்ளனர். அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.
குடமுழுக்கு
26 மே 2010இல் குடமுழுக்கு நடைபெற்றதாக கல்வெட்டு உள்ளது.
படத்தொகுப்பு
- சொர்ணகடேஸ்வரர் கோவிலின் முன் தோற்றம்
- சொர்ணகடேஸ்வரர் கோவில் முகப்பு தோற்றம்
- சொர்ணகடேஸ்வரர் உட்பிரகார முகப்பு தோற்றம்
- சொர்ணகடேஸ்வரர் ஆலய நந்தி
- தேவார மூவர் மற்றும் மாணிக்கவாசகர்
- சொர்ணகடேஸ்வர் கோவிலின் இடது புறத்தோற்றம்
- சொர்ணகடேஸ்வர் சன்னதி உட்பகுதி
- சொர்ணகடேஸ்வரர் கருவறை விமானம்
- சொர்ணகடேஸ்வரர் ஆலயம் உட்பிரகாரம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads