நேமம் ஜெயங்கொண்ட சோழீசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நேமம் ஜெயங்கொண்ட சோழீசுவரர் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

விரைவான உண்மைகள் ஜெயங்கொண்ட சோழீசுவரர் கோயில், அமைவிடம் ...
Remove ads

அமைவிடம்

இக்கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேமம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியை ஜெயங்கொண்ட சோழபுரம், ஜெயங்கொண்டபுரம், குலசேகரபுரம், மதுநந்திபுரம் என்று பல பெயர்களால் அழைக்கின்றனர். [1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக ஜெயங்கொண்ட சோழீசுவரர் உள்ளார். இங்குள்ள இறைவி சௌந்தரநாயகி ஆவார். கோயிலின் முன்பாக கோயில் தீர்த்தமான சோழ தீர்த்தம் உள்ளது. [1]

அமைப்பு

கோயில் ஐந்து நிலை ராஜ கோபுரத்தைக் கொண்டு அமைந்துள்ளது. கோயில் மேற்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. தல விநாயகர் ஆவுடையில் உள்ளார். இரு திருச்சுற்றுகளைக் கொண்ட இக்கோயிலில் பைரவர் மேற்கு நோக்கி உள்ளார். ஜெயங்கொண்ட விநாயகர், முருகன், விசுவநாதர், விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை சன்னதிகள் உள்ளன. அசுரர்களிடமிருந்து தம்மைக் காத்துக்கொள்ள தேவர்கள் சிவனை வழிபட வந்தனர். அப்போது யோக நிலையில் இருந்த அவரை எழுப்புவதற்காக மன்மதனை வேண்ட, மன்மதன் சிவன்மீது மலர்க்கணை தொடுத்தார். சிவன் தன் கண்களைத் திறந்து அவரைச் சாம்பலாக்கினார். ஆதலால் மூலவர் ஜெயங்கொண்ட சோழீசுவரர் என்றழைக்கப்படுகிறார். [1]

திருவிழாக்கள்

பிரதோஷம், சிவராத்திரி போன்ற விழாக்கள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. [1]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads