பசார் நவாசு
இந்திய கவிஞர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பசார் நவாசு (Bashar Nawaz) (18 ஆகத்து 1935 - 9 சூலை 2015) [1] இந்திய உருது கவிஞர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் பாலிவுட் திரைப்படமான பசார் படத்தில் கரோகே யாத் பாடலை எழுதினார். உருது இலக்கியத்திற்கான இவரது பங்களிப்பிற்காக "பூலோத்சவ் சம்மான்" மற்றும் காலிப் விருதை இவர் பெற்றார். [2]
Remove ads
தொழில்
' பசார் ', 'லோரி' மற்றும் 'சேன் வபா' போன்ற சில இந்திப் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். குலாம் அலி, லதா மங்கேசுகர், முகமது அசீசு, ஆசா போசலே, தலாத் அசீசு, பூபிந்தர் மற்றும் மெகிதி அசன் உள்ளிட்ட பலர் அவரது கசல்களுக்கு குரல் கொடுத்துள்ளனர் .
1983 ஆம் ஆண்டில் தூர்தர்சனில் ஒளிபரப்பப்பட்ட அமீர் குசுரோ என்ற தொலைக்காட்சி தொடரின் 13 அத்தியாயங்களையும் அவர் எழுதினார். அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்ட "சாரே சகான் சே அச்சா இந்துசுதான் கமாரா" என்ற இசை நாடகத்தின் 26 அத்தியாயங்களையும் பசார் எழுதியுள்ளார். 2000 ஆம் ஆண்டில் தூர்தர்சனில் ஒளிபரப்பப்பட்ட டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரைப் பற்றிய ஒரு தொடருக்கு அவர் திரைக்கதை எழுதினார்.
நவாசின் கவிதைகள் மராத்தி, இந்தி, பஞ்சாபி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, இதழ்கள் மற்றும் தொகுப்புகளில் வெளியிடப்பட்டுள்ளன. இவரது பத்து கவிதைகள் சாகீர் அலியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பாக்கித்தானைச் சேர்ந்த அன்வர் சயீத் என்பவர் தனது ‘உருது இலக்கியத்தின் சிறு வரலாறு’ என்ற நூலில் பசர் நவாசைப் பற்றி சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். 1960 ஆம் ஆண்டு முதல் அனைத்து சிறந்த உருது கவிதைத் தொகுப்புகளிலும் அவரது கசல்கள் மற்றும் கவிதைகள் சேர்க்கப்பட்டுள்ளன என்று உருது கவிஞர் கான் சமிம் கூறினார். [3] [4] 9 2015 ஆம் ஆண்டு சூலை மாதமன்று, பசர் நவாசு தனது 79 வயதில் அவுரங்காபாத்தில் இறந்தார். [5] [6]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads