பாடியநல்லூர்

தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பாடியநல்லூர் (Padianallur) என்பது தமிழ்நாடின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இந்த ஊரானது செங்குன்றம் புறநகர்ப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் பாடியநல்லூர், நாடு ...

ஊராட்சியாக இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[1][2]

Remove ads

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 69 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பாடியநல்லூர் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 13.1989°N 80.1765°E / 13.1989; 80.1765 ஆகும். செங்குன்றம், காரனோடை ஊராட்சி, புழல், அலமாதி ஆகியவை பாடியநல்லூர் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும். பாடியநல்லூர் பகுதியில் நெடுஞ்சாலை சுங்கச்சாவடி ஒன்றும் அமையப் பெற்றுள்ளது.[3]

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,863 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பாடியநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. படையநல்லூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கோயில்கள்

பாடியநல்லூர் திருநீற்றீசுவரர் கோயில் மற்றும் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோயில்,[5][6] செல்வ விநாயகர் கோயில்[7] மற்றும் மொண்டிமாரியம்மன் கோயில்[8] ஆகியவை பாடியநல்லூர் பகுதியில் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads