பார்வதிபாய்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பார்வதிபாய் (Parvatibai) (6 ஏப்ரல் 1734 - 23 செப்டம்பர் 1763) மூன்றாம் பானிபட் போரில் மராட்டிய இராணுவத்தின் தளபதியாக பணியாற்றிய சதாசிவராவ் பாவ் என்பவரின் இரண்டாவது மனைவியாவார். பென் பகுதியின் கொல்ஹட்கர் குடும்பத்தைச் சேர்ந்த இவர், முதல் மனைவி உமாபாய் இறந்த பின்னர் சதாசிவராவ் பாவுவை மணந்தார். எனவே பேஷ்வா குடும்பத்தில் உறுப்பினரானார். அவர் சாகுஜியின் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தார். இவரது மருமகள் இராதிகாபாய் விசுவாசராவ் என்பவரை மணந்தார்.
Remove ads
பானிபட் போர்
சதாசிவராவின் கீழ் மராட்டியர்கள் வட இந்தியாவுக்குச் சென்றபோது, இவரும் தனது கணவருடன் சென்றார். பானிபட்டுக்கு செல்லும் வழியில் இவர் மதுரா மற்றும் பிருந்தாவனத்திற்கு நானா பட்நாவிசின் மராத்திய முகாமில் உள்ள பிற பெண்களுடன் யாத்திரை செய்தார். 1761 சனவரி 14 அன்று நடந்த இறுதிப் போரில் இவர் கலந்து கொண்டார். சதாசிவராவ் பாவின் சில விசுவாசமான மனிதர்களால் போர்க்களத்திலிருந்து வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டார். தப்பிச் செல்லும் வழியில் மல்கர் ராவ் ஓல்கரை தற்செயலாக சந்தித்தார், அவர் இவரை சம்பல் ஆற்றின் தெற்கே பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். [1]
Remove ads
தனது கணவரின் மரணமும் அதன் பின்விளைவும்
இவரது கணவர் சதாசிவராவ் பாவ் மூன்றாம் பானிபட் போரில் இறந்தார். போருக்கு முன்பு தன் கணவருக்கு வாக்குறுதியளித்தபடி வாழ்நாள் முழுவதும் தான் ஒரு விதவையாக இருக்க மறுத்துவிட்டார்.
இறப்பு
மராட்டியப் பேரரசில் பல ஏற்ற தாழ்வுகளைக் கண்ட இவர் மாதவாராவ் ஆட்சியில் இருந்தபோது இறந்தார். நிமோனியா காரணமாக புனேவில் இறந்த இவர் இறந்த பிறகு சதாசிவராவ் பாவின் சதியாக நடத்தப்பட்டார். இவர் புனேவில் தகனம் செய்யப்பட்டார். இருப்பினும், மராட்டியர்கள் இவரது எந்த நினைவுச்சின்னத்தையும் கட்டும் நிலையில் இல்லை. இவரது மரணத்திற்குப் பின் சடங்குகள் இவரது சொந்த ஊரான பென்னில் செய்யப்பட்டன.
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads