பால்கு ஆறு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பால்கு ஆறு அல்லது பல்கு ஆறு அல்லது பல்குனி ஆறு, இந்தியாவின் பிகார் மாநில நகரமான கயையில் பாயும் புனித ஆறு ஆகும். [1]இந்துக்கள் மற்றும் பௌத்தர்கள் பால்கு ஆற்றை புனிதமாகக் கருதுகின்றனர். பண்டைய காலத்தில் பால்கு ஆற்றை, சமசுகிருத மொழியில் நிரஞ்சனா ஆறு என அழைக்கப்பட்டது. பால்கு ஆற்றின் கரையில் கயை நகரம் மற்றும் விஷ்ணுபாதம் கோயில் உள்ளது.
லீலாஜன் ஆறும், மோகனா ஆறும் புத்தகயாவில் ஒன்று கூடி பால்கு ஆறாக கயையில் பாய்கிறது. [2]பால்கு ஆற்றை நிரஞ்சனா ஆறு என்றும் அழைப்பர்.[3]
மழைக் காலங்களில் மட்டும் பால்கு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். பிற பருவ காலங்களில் பால்கு ஆறு நீரின்றி வற்றி இருக்கும்.[2]
Remove ads
சமயச் சிறப்பு
இந்து சமயத்தினர், பால்கு ஆற்றங்கரையில் பிண்ட தானம், தர்ப்பணம் போன்ற நீத்தார் வழிபாடு செய்வதை சிறப்பாக கருதுகின்றனர். [2][4]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads