பாவகீதம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாவகீதம் ( Bhavageeth) (அதாவது 'உணர்ச்சி கவிதை') என்பது இந்தியாவில் கவிதை மற்றும் மெல்லிசையின் ஒரு வடிவமாகும். இந்த வகையறையில் பாடப்பட்ட பெரும்பாலான கவிதைகள் காதல், இயற்கை மற்றும் தத்துவம் போன்றவற்றுடன் தொடர்புடையவை, மேலும் கஜல்கள் ஒரு விசித்திரமான மீட்டருடன் பிணைக்கப்பட்டிருந்தாலும், கசல்களிடமிருந்து பாவகீதம் அதிகம் வேறுபட்டதல்ல. இந்த வகை கருநாடகம் மற்றும் மகாராட்டிராவில் மிகவும் பிரபலமானது. இது பிற மொழிகளில் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படலாம்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Remove ads
கன்னட பாவகீதம்
கன்னட பாவகீதம் நவீன கன்னட கவிதைகளிலிருந்து பெறப்படுகிறது. நவீன கன்னட கவிஞர்கள் குவேம்பு, டி.ஆர் பேந்த்ரே, கோபாலகிருஷ்ண அடிகா, கே. எஸ். நரசிம்மசுவாமி, ஜி எஸ் சிவருத்ரப்பா, கே. எஸ். நிசார் அகமது, ராஜு அனந்தசாமி ஆகியோரின் பாடல்களுக்கு இவ்வகையான இசையமைக்கப்பட்டுள்ளன.
மராத்தி பாவகீதம்
மராத்தி பாவகீதம் மராத்தி மொழி கவிதைகளிலிருந்து பெறப்படுகிறது. இவ்வகை இசையில் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர்கள் / கலைஞர்கள் / பாடகர்கள் ஹிருதநாத் மங்கேஷ்கர், லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே, சுதிர் பாட்கே, அருண் தேதி, மற்றும் சுமன் கல்யாண்பூர் ஆகியோர் அடங்குவர். கவிஞர்களில் சுரேஷ் பட் (மராத்தி கசல்களை பிரபலமாக்கியவர்) மற்றும் சாந்தா ஷெல்கே ஆகியோர் அடங்குவர்.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads