மகர னகர மயக்கம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

[ம்] எழுத்தில் முடியும் சொல் வருமொழியின் முதலெழுத்து உயிரெழுத்தாக இருந்தால் [ன்] எழுத்தாக மாறும்.

எடுத்துக்காட்டு

  • அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து [1]
  • அறன் அழீஇ அல்லவை செய்தல் [2]
  • அறன் வரையான் (வரையான் என்னும் சொல்லிலுள்ள [வ] அரையுயிர்) [3]

தமிழில் இப்படி மயங்காத அஃறிணைச் சொற்கள் ஒன்பது எனத் தொல்காப்பியம் வரையறுத்துக் கூறுகிறது. [4] இவற்றிற்கு எடுத்துக்காட்டுகள் தருவதில் உரையாசிரியர்கள் வேறுபடுகின்றனர்.

உயர்திணைப் பெயர்கள் இவ்வாறு மாறுவதிலை.

கந்தன் என்னும் சொல்லைக் கந்தம் என எழுதுவதில்லை.

1.உகின் [5], 2.செகின் [6], 3.விழன் [7], 4.பயின் [8], 5.அழன் [9], 6.புழன் [10], 7.குயின் [11], 8.கடான் [12], 9.வயான் [13] ஆகியவை அந்த 9 சொற்கள் என்று இளம்பூரணர் எடுத்துக்காட்டுகிறார். இவற்றில் உகின் என்னும் சொல்லை விட்டுவிட்டு எகின் [14] என்னும் சொல்லைச் சேர்த்து நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார்.

  • நன்னூல் இதனை எழுத்துப்பொலி எனக் குறிப்பிடுகிறது. [15]
Remove ads

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads