மகர னகர மயக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
[ம்] எழுத்தில் முடியும் சொல் வருமொழியின் முதலெழுத்து உயிரெழுத்தாக இருந்தால் [ன்] எழுத்தாக மாறும்.
எடுத்துக்காட்டு
- அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து [1]
- அறன் அழீஇ அல்லவை செய்தல் [2]
- அறன் வரையான் (வரையான் என்னும் சொல்லிலுள்ள [வ] அரையுயிர்) [3]
தமிழில் இப்படி மயங்காத அஃறிணைச் சொற்கள் ஒன்பது எனத் தொல்காப்பியம் வரையறுத்துக் கூறுகிறது. [4] இவற்றிற்கு எடுத்துக்காட்டுகள் தருவதில் உரையாசிரியர்கள் வேறுபடுகின்றனர்.
உயர்திணைப் பெயர்கள் இவ்வாறு மாறுவதிலை.
- கந்தன் என்னும் சொல்லைக் கந்தம் என எழுதுவதில்லை.
1.உகின் [5], 2.செகின் [6], 3.விழன் [7], 4.பயின் [8], 5.அழன் [9], 6.புழன் [10], 7.குயின் [11], 8.கடான் [12], 9.வயான் [13] ஆகியவை அந்த 9 சொற்கள் என்று இளம்பூரணர் எடுத்துக்காட்டுகிறார். இவற்றில் உகின் என்னும் சொல்லை விட்டுவிட்டு எகின் [14] என்னும் சொல்லைச் சேர்த்து நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார்.
Remove ads
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads