மகா சிவராத்திரி கற்பம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மகா சிவராத்திரி கற்பம் [1] [2] என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான சம்பந்தரால் எழுதப்பட்ட நூல்களில் ஒன்று. மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி நாள் மகா சிவராத்திரி என்னும் நோன்பு நாளாக சிவன்குடி மக்கள் வழிபடுவர். இதனை வழிபடும் நியமங்கள் எவை, இதனை வழிபடுவதால் பெறும் பேறுகள் இவை, இந்த நாளில் நோன்பிருந்து பேறு பெற்றவர்கள் இன்னின்னார் என்னும் கதைகள் முதலான செய்திகள் இந்த நூலில் கூறப்பட்டுள்ளன. இந்த நூல் 39 குறட்பாக்களைக் கொண்ட ஒரு சிறு நூல்.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads