மம்சாபுரம்
விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மம்சாபுரம் (ஆங்கிலம்:Mamsapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டத்தில் இருக்கும் தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். இது ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து 8 கி.மீ. தொலைவிலும், விருதுநகரிலிருந்து 51 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மம்சாபுரம் பேரூராட்சி 52 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 18 வார்டுகளும், 5,388 வீடுகளும், 150 தெருக்களும், 18,635 மக்கள்தொகையும் கொண்டது.[1] மம்சாபுரம் பேரூராட்சி ஸ்ரீவில்லிப்புத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
Remove ads
பெயர்க் காரணம்
மருதநாயகம் அல்லது கான்சாகிப் என்கிற முகமது யூசுப்கானின் பெயரால் மகம்மது கான்சாகிப் புரம் என்றழைக்கபட்ட ஊரே இப்பொழுது மம்சாபுரம் என்றழைக்கப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads