மரியோ மிராண்டா

இந்திய கேலிச் சித்திர ஓவியர் (1926–2011) From Wikipedia, the free encyclopedia

Remove ads

மரியோ மிராண்டா (Mario Miranda, 1926-2011) இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட ஓர் ஓவியரும் கேலிச் சித்திரக்காரருமாவார். கோவா மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 85 ஆவது வயதில் டிசம்பர் 11 2011 இல் காலமானார்.

பிரபல பாத்திரப் படைப்புகள்

இவரின் 'மிஸ் நிம்புபானி' மற்றும் 'புந்தல்தாஸ்' போன்ற கேலிச்சித்திரப் பாத்திரங்கள் மிகவும் பிரபலமானவை. கோவாவைப் பிரபலப்படுத்திய படைப்புகள் இவரது கலைப்படைப்புகள் பெரும்பாலும் இவரது சொந்த மாநிலமான கோவாவை மையப்படுத்தி வரையப்பட்டிருந்தன. கோவா மக்களையும் அவர்களது பண்பாட்டையும் வெளிப்படுத்திய அவரது படைப்புகள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கோவாவைப் பிரபலப்படுத்த பெரிதும் உதவின. கோவாவின் நிலப்பரப்புகள், மக்களின் வாழ்க்கை, கலை, கலாச்சாரங்கள் போன்றவை இவரது படைப்புகளில் பெரிதும் வெளிப்பட்டன.

Remove ads

விருதுகள்

இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது.

மூலம்

பிரபல ஓவியர் மரியோ மிராண்டா காலமானார்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads