மருதனார்மடம் சந்தி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இணுவில் மருதனார்மடம் சந்தி யாழ்ப்பாண மாவட்டத்தில், யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியும், மானிப்பாயில் இருந்து கைதடிக்குச் செல்லும் வீதியும் ஒன்றையொன்று வெட்டும் சந்தியாகும். இது யாழ்ப்பாண நகரில் இருந்து ஐந்தாவது மைலில் உள்ளது. இது வலிதெற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட இணுவில் பிரதேசத்தின் ஒரு குறிச்சி பகுதியாகும்.
சேர்.பொன். இராமநாதனால் நிறுவப்பட்ட இராமநாதன் பெண்கள் கல்லூரி இச் சந்தியின் இணுவில் வடமேற்கு மூலையில் உள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைக் கல்லூரியும் இதற்கு அருகிலேயே அமைந்துள்ளது. யாழ் மக்களிடையே பெயர் போன இணுவில் மருதனார்மடம் வேளாண் சந்தை இவ் இடத்திலே அமைந்துள்ளது.
ஆதாரம்
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads