மல்லாங்கிணறு
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி. From Wikipedia, the free encyclopedia
Remove ads
மல்லாங்கிணறு (ஆங்கிலம்:Mallankinaru), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு பழமையான செங்கமலத்தாயார் உடனுறை சென்னகேசவப் பெருமாள் கோயில் உள்ளது. இது விருதுநகரிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மல்லாங்கிணறு பேரூராட்சி 3,308 வீடுகளையும், 12,986 மக்கள்தொகையும் கொண்டது.[4]
இது 8.7 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 61 தெருக்களும் கொண்ட மல்லாங்கிணறு பேரூராட்சி திருச்சுழி (சட்டமன்றத் தொகுதி)க்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]
Remove ads
இவ்வூரில் பிறந்தவர்கள்
- எஸ். ராமகிருஷ்ணன் - தமிழ் எழுத்தாளர்
- தங்கம் தென்னரசு - தமிழக அரசியல்வாதி முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியனின் மகன்.
- இங்கு இரண்டு மேல்நிலைப்பள்ளிகளும், இரண்டு ஆரம்பப் பள்ளிகளும், ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும் நன்கு பிரசித்தி பெற்ற கோவில்களும் தேவாலயமும் உள்ளன.
- இங்கு இந்துக்கள் அதிகம் உள்ளனர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads