மாங்குடி, திருநெல்வேலி மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாங்குடி (ஆங்கிலம்:Mangudi (Tirunelveli District)) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவில் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.[1]

விரைவான உண்மைகள் மாங்குடி, நாடு ...

சங்கரன்கோவில், திருநெல்வேலி, இராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகியவை இவ்வூருக்கு அருகில் அமைந்த நகரங்கள் ஆகும்.

Remove ads

வரலாறு

சங்ககாலத்தில் இந்த மாங்குடியில் வாழ்ந்த புலவர் மாங்குடி கிழார்.
மதுரைக் காஞ்சி எழுதிய இவர் தன்னை மாங்குடி மருதனார் என்று சில பாடல்களில் குறிப்பிடப்படுகிறார்.
சங்கப்பாடல் தொகுப்பில் இவரது பாடல்கள் 13 உள்ளன.

மாங்குடி தொல்லியல் களம்

தமிழ்நாடு தொல்லியல் துறையினர், மாங்குடியில் 2001-2002ல் அகழ்வாராய்ச்சி செய்த போது, கிமு இரண்டாம் நூற்றாண்டின் தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட கருப்பு-சிவப்பு நிற மட்பாண்டங்களின் துண்டுகள் கண்டுபிடித்தனர்.[2]

மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3957 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 1994 ஆண்கள், 1963 பெண்கள் ஆவார்கள். மாங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 75.12% ஆகும்.

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads