மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்

கள்ளர் குலத்தில் பிறந்தவர் From Wikipedia, the free encyclopedia

மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்
Remove ads

ஸ்ரீ பிரகதாம்பாதாஸ் இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பகதூர் (Raja Sri Brahdamba Dasa Raja Sir Martanda Bhairava Tondaiman) ((26 நவம்பர் 1875 – 28 மே 1928) என்பவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் அரசராக 1886 முதல் 1928 மே 28 வரை இருந்தவர் ஆவார். ஆஸ்திரேலிய பெண்மணி மோலி பிங்கை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் ஆங்கிலேய அரசு இவரை பதவியில் இருந்து நீக்கியது. இவரது இயற்பெயர் மார்த்தாண்ட பைரவ பல்லவராயர். இவர் பல்லவராயர் பரம்பரையை சேர்ந்தவர். நவம்பர் 26, 1875 அன்று புதுக்கோட்டை இளவரசி ராஜாமணி சாஹிப் மற்றும் அவரது கணவர் எம்.ஆர்.ஆர். குழந்தைசாமி பல்லவராயர் சாஹிப் அவர்களுக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். சிறு வயதிலேயே, மன்னர் இராமச்சந்திர தொண்டைமான் அவர்களால் தத்தெடுக்கப்பட்டார்.[1]

விரைவான உண்மைகள் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான், ஆட்சிக்காலம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads