மித்தானி இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மித்தானி இராச்சியம் (கிமு 1475 - 1275) (Mitanni) (/mɪˈtæni/; தற்கால வடக்கு சிரியா, மற்றும் தென்கிழக்கு அனதோலியாவின் பிரதேசங்களை கிமு 1475 முதல் கிமு 1275 முடிய ஆண்ட, இந்திய-ஐரோப்பிய மொழிகளில் ஒன்றான உரியன் மொழி பேசியவர்கள் ஆவார். மித்தானி இராச்சியத்தின் தலைநகரம் வாசுகன்னி ஆகும்.
மித்தானியர்கள் இட்டைட்டு பேரரசின் அமோரிட்டு நகரத்தை வீழ்த்தி, மெசொப்பொத்தேமியாவில் மித்தானி இராச்சியத்தை கிமு 1475ல் நிறுவினர்.[1]
மெசொப்பொத்தேமியாவில் மித்தானியர்கள் பழைய அசிரியப் பேரரசுக்கும், மத்திய அசிரியப் பேரரசுக்கும் இடையே பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி தங்கள் இராச்சியத்தை நிறுவியவர்கள்.
துவக்கத்தில் எகிப்தின் 18வது வம்ச ஆட்சிக்கும், மித்தானியர்களுக்கும் கடும் பகை இருந்தது. இட்டைட்டுப் பேரரசின் ஆதிக்கத்தால், தங்களை காத்துக் கொள்ள மித்தானியர்களும், எகிப்தியர்களும் உடன்படிக்கை செய்துகொண்டனர்.
மித்தானியர்கள் யூப்ரடீஸ் - டைகிரீஸ் ஆறுகளுக்கு மேற்புறப் பகுதிகளை கிமு 1475 முதல் 1275 முடிய ஆண்டனர். 1275ல் மித்தானி இராச்சியம் இட்டைடுகள் மற்றும் அசிரியர்களின் தொடர் தாக்குதல்களால் 1275ல் மித்தானி இராச்சியம் வீழ்ச்சியடைந்தது. பின்னர் மத்திய அசிரியப் பேரரசில் மித்தானி ஒரு மாகாணமாக விளங்கியது.

Remove ads
மித்தானி இராச்சிய ஆட்சியாளர்கள்
Remove ads
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads