முதலாம் இராமா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரா புத்தயோப்தா சூலாலோக் (Phra Phutthayotfa Chulalok, தாய்: พระพุทธยอดฟ้าจุฬาโลก), பிறப்பு தொங்துவாங் (Thongduang, தாய்: ทองด้วง) அல்லது முதலாம் இராமா (Rama I) (20 மார்ச் 1737 – 7 செப்டம்பர் 1809), இரத்தனகோசின் இராச்சியத்தை நிறுவியவரும், சியாமின் (இன்றைய தாய்லாந்தின்) சக்கிரி அரசமரபின் முதலாவது மன்னரும் ஆவார். தாய் மொழியில் இவரது முழுப் பட்டப் பெயர் பிரா பாத் சோம்தெத் பிரா பரமோருராச்சா மகாசக்கிரிபரமோமானத் பிரா புத்தயோஃப்த்தா சூலாலோக் என்பதாகும்.[1] 1782 இல் தோன்புரி பேரரசர் தக்சினை பதவியில் இருந்து அகற்றிய கிளர்ச்சியின் பின்னர் இவர் மன்னரானார். இவர் மீள ஒன்றிணைக்கப்பட்ட இராச்சியத்தின் தலைநகராக இரத்தினகோசின் நகரை அமைத்தவர் என்பதற்காகப் புகழப்படுகிறார்.
தொங்துவாங் (முதலாம் இராமா) சுகோத்தாய் இராச்சியத்தின் வழிவந்த மொன் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை அயூத்தியா இராச்சியத்தில் அரச நீதிமன்றத்தில் பணியாற்றியவர்.[2][3] இவரது தாயார் தாவோரெயுங் (யொக்) சீன-வம்சாவளி ஆவார்.[4][5][6] இவருடன் கூடப் பிறந்தவர்கள் அறுவர் ஆவர்.
தொங்துவாங் தக்சின் மன்னருடன் இணைந்து பர்மிய கொன்பாவுங் அரசமரபினருடன் போர்களில் பங்குபற்றி, சியாமின் ஒன்றிணைவுக்குப் பெரும் பங்காற்றினார். இக்காலகட்டத்தில் தொங்துவாங் சியாமின் மிகவும் பலம் பொருந்திய இராணுவத் தலைவர் எனப் பெயர் பெற்றார்.[7] 1782 ஆம் ஆண்டில், சியாமைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, தன்னை மன்னராக அறிவித்தார். இவரது காலத்தில் பர்மிய-சியாம் போர் (1785) இடம்பெற்றது. இதுவே சியாம் மீது பர்மியர்களின் கடைசிப் பெரும் தாக்குதல் ஆகும்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads