முதலாம் செயவர்மன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

முதலாம் செயவர்மன் (ஆங்கிலம்: Jayavarman I; கெமர்: ជ័យវរ្ម័នទី១; தாய்: ชัยวรมันที่ 1; சீனம்: 阇耶跋摩一世) என்பவர் கெமர் பேரரசை (Khmer Empire) சார்ந்த சென்லா இராச்சியத்தின் (Chenla Kingdom) அரசர் ஆவார்.

விரைவான உண்மைகள் முதலாம் செயவர்மன்Jayavarman I ជ័យវរ្ម័នទី១, கெமர் பேரரசின் அரசர் ...

இவர் வெற்றியின் பாதுகாவலர் (Protege of Victory) என்றும் அழைக்கப்பட்டார். மற்றும் ஐக்கிய சென்லாவின் (United Chenla) கடைசி ஆட்சியாளராகவும்; கெமர் பேரரசின் முன்னோடி ஆட்சியாளராகவும் கருதப்படுகிறார்.

இருப்பினும், இவருக்குப் பின்னர் வந்த இரண்டாம் செயவர்மன் (கி.பி. 770 – கி.பி. 850) (செயவர்மன் II) Jayavarman II) என்பவர்தான் கெமர் பேரரசை உருவாக்கியவராகும்.

Remove ads

வரலாறு

முதலாம் செயவர்மன் கி.பி. 657 முதல் கி.பி. 681 வரை சென்லா இராச்சியத்தை ஆட்சி செய்தார். முன்பு பூனான் இராச்சியத்தால் கட்டுப்படுத்தப்பட்ட சென்லா நிலப் பகுதிகள்; இவரின் ஆட்சியின் போதும்; மற்றும் இவரின் முன்னோடிகளான இரண்டாம் பவவர்மன் (Bhavavarman II) மற்றும் சந்திரவர்மன் (Candravarman) ஆட்சியின் போதும்; இவர்களின் அதிகாரத்தின் கீழ் வந்தன.

இருப்பினும், முதலாம் செயவர்மன் ஆண் வாரிசுகளை விட்டுச் செல்லவில்லை. இதுவே கம்போடியா பிரிவதற்கு வழிவகுத்தது.[1][2]

கல்வெட்டுகள்

முதலாம் ஜெயவர்மன் காலத்தின் போது பல கல்வெட்டுகள் உருவாக்கப்பட்டு உள்ளன. அந்தக் கல்வெட்டுகள்:

  • துவால் கோக் பிரா (Tuol Kok Prah)
  • வாட் பிரே வால் (Wat Prei Val)
  • பிரா குகா லுவான் (Prah Kuha Luon)
  • வாட் கிடேய் ஆங் (Wat Kdei Ang)
  • வாட் பாரே (Wat Baray)
  • துவோல் நாக் தா பாக் கா (Tuol Nak Ta Bak Ka)

புராந்திரபுரம்

முதலாம் ஜெயவர்மனின் அரண்மனை புராந்திரபுரத்தில் (Purandarapura) இருந்தது. இவர் முதலாம் ஈசானவர்மன் (Isanavarman I) எனும் சென்லா அரசரின் கொள்ளுப் பேரன் ஆவார்.

Remove ads

மேலும் காண்க

சான்றுகள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads