முதுமொழிக்காஞ்சி (இலக்கணம்)
புறநானூற்றில் இருந்து எடுக்கப்பட்ட ஒன்று From Wikipedia, the free encyclopedia
Remove ads
முதுமொழிக் காஞ்சி என்னும் துறையைச் சேர்ந்த பாடல்கள் புறநானூற்றுத் தொகுப்பில் நான்கு உள்ளன. [1] இந்தத் துறை புறநானூற்றில் புறத்திணையில் ஒன்றான பொதுவியல் என்னும் பகுதியில் வருகிறது.
புறநானூறு
இதில் வரும் பாடல்கள் தனி ஒருவனுக்குக் கூறும் அறிவுரைகள்.
- மக்களுக்கெல்லாம் உணவுதான் உயிர். எனவே உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர். உணவு எனப்படுவது நிலத்தில் விளைவனவும் நீரும். நிலத்தில் நீர் பாய்ந்தால் விளைச்சல் பெருகும். நீர் பாய நீரை நிலத்தில் தடுத்துத் தந்தவர் புகழ் உலகில் நிலைக்கும். [2]
- புலவர் பாடிய பாட்டு உடையோர் புகழ் நிலைத்திருக்கும். எனவே வல்லவரோ, வல்லமை இல்லாதவரோ யாவராயினும் வருந்தி வந்தவருக்கெல்லாம் அருள வேண்டும். [3]
- செல்வத்தால் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றும் ஆற்றுக.[4]
- சுற்றத்தாரோடு சேர்ந்து இன்முகம் காட்டுங்கள். கூத்தாடுவோரைப் பார்க்க வந்த கூட்டம் போல் நீங்கும் செல்வத்தைப் பலரும் புகழும்படி பயன்படுத்துங்கள்.[5]
- வயிற்றுக்காக மானம் போக வாழவேண்டாம்.[6]
Remove ads
அறநூல்
- பொதுமக்களுக்குக் கூறும் அறிவுரை
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று முதுமொழிக்காஞ்சி. இது வாழ்வில் கடைப்பிடிக்கவேண்டிய நன்னெறிகளைப் பத்துப்பத்தாக ஒருவரிப் பாடலில் அடுக்கிக் கூறுகிறது.
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads