மேலச்சொக்கநாதபுரம்

From Wikipedia, the free encyclopedia

மேலச்சொக்கநாதபுரம்map
Remove ads

மேலச்சொக்கநாதபுரம் (ஆங்கிலம்:Melachokkanathapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டத்தில், போடிநாயக்கனூரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[4]

விரைவான உண்மைகள்

மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், தமிழ்நாடு - கேரளா எல்கைக் கோட்டில் அமைந்துள்ள பேரூராட்சி ஆகும். பேரூராட்சியில் முக்கிய சுற்றுலா தளமாக போடி மெட்டு அமைந்துள்ளது. மேலும் இப்பேரூராட்சியில் முக்கிய நீர் ஆதாரமாக கூவலிங்கம் ஆறு மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது.

Remove ads

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இப்பேரூராட்சி 12,836 மக்கள்தொகையும், 28 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 64 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5] மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியை, போடி நகராட்சியுடன் இணைக்க வேண்டும் என இப்பகுதி  மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.[6]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads