மொண்டா சந்தை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மொண்டா சந்தை ( Monda Market ) என்பது இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசத்தின் தலைநகரான ஐதராபாத்தின் வடக்கே உள்ள சிக்கந்தராபாத்தில் அமைந்துள்ள ஒரு காய்கறி சந்தையாகும். இது 100 ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானிய இராணுவப் பிரிவுகளின் காய்கறி தேவையை பூர்த்தி செய்வதற்காக நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.[1] சந்தை சிக்கந்திராபாத் தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் 500 மீ (0.31 மைல்) தொலைவிலுள்ளது.
Remove ads
பின்னணி
இது ஐதராபாத்தின் மிகப்பெரிய மொத்த மற்றும் சில்லறை சந்தைகளில் ஒன்றாகும். இங்கு வாகன நிறுத்தத்திற்கான இடங்கள் இல்லை. அதிகாரப்பூர்வமாக சுமார் 375 வர்த்தகர்கள் மோண்டா சந்தையில் வணிகம் செய்து வருகின்றனர். மோசமான நிலைமைகள் மற்றும் போதுமான வசதிகள் இல்லாததால், தற்போதுள்ள கட்டமைப்பு இடிக்கப்பட வேண்டும் என்றும், அதன் இடத்தில் ஒரு புதிய பல மாடி வளாகம் கட்டப்பட உள்ளது என்றும் பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி ஆணையம் தெரிவித்துள்ளது. 1998 ஆம் ஆண்டில், மொத்த வியாபாரம் சிக்கந்திராபாத் நகரிலிருந்து 6 கி.மீ. (3.7 மைல்) தொலைவில் உள்ள போவென்பள்ளிக்கு மாற்ற திட்டமிடப்பட்டது. வர்த்தகர்கள் இந்த நடவடிக்கையை எதிர்த்ததை அடுத்து சில்லறை சந்தையை மாற்றுவதற்கான திட்டம் கைவிடப்பட்டது.[2]
Remove ads
கட்டிடக்கலை
மோண்டா சந்தை எழில்படுக் கலைபாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சந்தையை ஒட்டி கண்டும் காணாத வகையில் ஒரு கடிகார கோபுரம் உள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads