து. இரவிக்குமார்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரவிக்குமார் (Ravikumar (writer)) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். எழுத்தாளர், வழக்கறிஞர்[சான்று தேவை] அரசியல்வாதி மற்றும் சாதி எதிர்ப்பு ஆர்வலர் என பன்முகங்களில் இவர் இயங்கினார். அம்பேத்கார் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இவர்[1] நிறப்பிரிகை என்ற பத்திரிகை இதழின் ஆசிரியராகவும் இருந்தார்.[சான்று தேவை] நிறப்பிரிகை இதழ் 1990 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல புதிய எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தியது.[2] இரவிக்குமார் விழுப்புரம் மக்களவையின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.[3][4]
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சீர்காழி வட்டத்தில் காவிரிக்கரை கிராமமான மாங்கணாம்பட்டில் துரைசாமி- கனகம்மாள் தம்பதியருக்கு 10-06-1961 ஆம் ஆண்டு சூன் மாதம் 10 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். செண்பகவல்லி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு ஆதவன், அதீதன் என்ற பிள்ளைகள் உள்ளனர்.
அரசியல் வாழ்க்கை
இரவிக்குமார் 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][6]
பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், விழுப்புரம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7][8]
எழுதிய நூல்கள்
கட்டுரைத் தொகுப்புகள்
- கண்காணிப்பின் அரசியல் (1995) விடியல் பதிப்பகம்[9]
- கொதிப்பு உயர்ந்து வரும் (2001) காலச்சுவடு பதிப்பகம்
- கடக்க முடியாத நிழல் (2003) காலச்சுவடு பதிப்பகம்
- மால்கம் எக்ஸ் (2003) காலச்சுவடு பதிப்பகம், உயிர்மை மறுபதிப்பு (2010)
- வன்முறை ஜனநாயகம் (2004) தலித் வெளியீடு
- சொன்னால் முடியும் (2007) விகடன் பதிப்பகம்
- இன்றும் நமதே (2007) விகடன் பதிப்பகம்
- தமிழராய் உணரும் தருணம் (2009) ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த கட்டுரைகளிந்தொகுப்பு. ஆழி பதிப்பகம்
- துயரத்தின்மேல் படியும் துயரம் (2010) ஆழி பதிப்பகம்
- காணமுடியாக் கனவு (2010) ஆழி பதிப்பகம்
- சூலகம் ( 2009) பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த கட்டுரைகள் உயிர்மை பதிப்பகம்
- கற்றனைத்தூறும் (2009) கல்வி தொடர்பான கட்டுரைகள் , உயிர்மை பதிப்பகம்
- பிறவழிப் பயணம் (2010) உயிர்மை பதிப்பகம்
- பாப் மார்லி - இசைப் போராளி (2010) பாப் மார்லியின் வாழ்க்கை வரலாறு , உயிர்மை பதிப்பகம்
- அண்டை அயல் உலகம் (2010) அண்டை நாடுகள் குறித்த கட்டுரைகள், உயிர்மை பதிப்பகம்
- கடல்கொள்ளும் தமிழ்நாடு (2010) சூழலியல் கட்டுரைகள் , மணற்கேணி பதிப்பகம்
- காற்றின் பதியம் (2010) மணற்கேணி பதிப்பகம்
- எல்.இளையபெருமாள்- வாழ்வும் பணியும் (2010) மணற்கேணி பதிப்பகம்
- சொல்லும் செயல் - ரவிக்குமார் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் (2010) மணற்கேணி பதிப்பகம்
கவிதை
- அவிழும் சொற்கள் (2009) உயிர்மை பதிப்பகம்
- மழைமரம் (2010) க்ரியா பதிப்பகம்
மொழிபெயர்ப்புகள்
- உரையாடல் தொடர்கிறது (1995) ஃபூக்கோ, எட்வர்ட் செய்த்,அம்பர்த்தோ எக்கோ முதலான உலகச் சிந்தனையாளர்களின் நேர்காணல்களும் கட்டுரைகளும்[10]
- எட்வர்ட் ஸெய்த், தமிழில் ரவிக்குமார், அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல், மணற்கேணிப் பதிப்பகம், புதுச்சேரி, 2010[10]
- கட்டிலில் கிடக்கும் மரணம் (2002) மஹாஸ்தாதேவி, இஸ்மத் சுக்தாய், இஸபெல் ஆலண்டே போன்ற பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்
- வெளிச்சமும் தண்ணீர் மாதிரிதான் (2003) காபிரியேல் கார்சியா மார்க்யூஸ், இஸபெல் அலண்டெ மற்றும் சிலரது கதைகள்
- பணிய மறுக்கும் பண்பாடு (2003) எட்வர்ட் செய்தின் எழுத்துகள்[10]
- வரலாறு என்னும் கதை (2010) - எட்வர்டோ கலியானோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள்
- வலசைப் பறவை ( 2010) எஹுதா அமிக்கய், கவாஃபி,மாயா ஆஞ்சலூ முதலானோரின் கவிதைகள்
தொகுப்பு நூல்கள்
- தலித் இலக்கியம், அரசியல், பண்பாடு (1996)
- தலித் என்கிற தனித்துவம் (1998)
- அயோத்திதாஸ் பண்டிதர் சிந்தனைகள் – 4 தொகுதிகள் (1999)
- ரெட்டைமலை சீனிவாசன் ஜீவித சருக்கம் - ( தன்வரலாறு) (1999)
- மிகைநாடும் கலை (2003) சினிமா கட்டுரைகள்
- சுவாமி சகஜாநந்தா- மேலவையிலும் பேரவையிலும் ஆற்றிய உரைகள் , மணற்கேணி பதிப்பகம்
- எங்கள் காலத்தில்தான் ஊழி நிகழ்ந்தது (2009) ஈழ இனப்படுகொலை குறித்த கவிதைகள், மணற்கேணி பதிப்பகம்
ஆங்கில நூல்கள்
- We, the Condemned (1999) (Against Death Penalty)
- Venomous Touch (2009) selected articles of Ravikumar, Samya, kolkatta
- Waking is another dream (2010) Poems on Mullivaykal, Navayana Publishing
- Tamil Dalit Writing (2010) An anthology of Tamil Dalit Literature , Oxford University Press[11]
Remove ads
இதழ்கள் வெளியீடு
- நிறப்பிரிகை- நவீன அரசியல் விவாதக்களத்தை உருவாக்கிய நிறப்பிரிகை இதழை அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி ஆகியவர்களோடு இணைந்து நடத்தியவர்.அந்த இதழ் இவரது முகவரியிலிருந்துதான் இவரால் வெளியிடப்பட்டது.
- தலித்- தலித் இலக்கியத்துக்கென தமிழில் வெளியிடப்பட்ட தலித்- இருமாத இதழின் ஆசிரியர். அது பதினொரு இதழ்கள் வெளியானபின் நின்றுபோனது.[9]
- போதி - தலித் வரலாற்றுக்கென இவரால் உருவாக்கப்பட்ட காலாண்டிதழ். இரண்டு இதழ்கள் வெளியாகி நின்றுபோயிருந்தது. தற்போது மீண்டும் வெளியாகத் தொடங்கியுள்ளது.[9]
- மணற்கேணி- இவரை ஆசிரியராகக்கொண்டு தமிழ்ச் செவ்வியல் இலக்கியம், தொல்லியல் முதலானவை குறித்த ஆழமான ஆய்வுகளைத் தாங்கி வெளிவரும் இருமாத இதழ்.
Remove ads
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads