ராணி சந்திரா
இந்திய நடிகை (1949-1976) From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராணி சந்திரா (Rani Chandra, 1949 – 12 அக்டோபர் 1976) என்பவர் மலையாளத் திரைப்பட நடிகை ஆவார். கேரளத்தின் அழகுராணியாகத் தெரிவு செய்யப்பட்டவர்.[1] இவர் பல மலையாள, தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். 1976 ஆம் ஆண்டில் விமான விபத்து ஒன்றில் இறந்தார்.
Remove ads
வாழ்க்கைச் சுருக்கம்
ராணி சந்திரா திருவிதாங்கூர்–கொச்சியில் 1949 ஆண்டில் சந்திரன், காந்திமதி ஆகியோருக்குப் பிறந்தார்.[1] எர்ணாகுள்ம் புனித தெரேசசு கல்லூரியில் கல்வி கற்றார். இவர் நடனக் குழு ஒன்றை நடத்தி வந்தார்.[2] 1972 ஆம் ஆண்டில் கேரள அழகுராணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
இவரது முதல் திரைப்படம் அஞ்சுசுந்தரிகள் ஆகும். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். இவர் நடித்த கடைசித் தமிழ்த் திரைப்படம் பத்ரகாளி இவர் இறந்த பின்னர் வெளிவந்தது.
Remove ads
மறைவு
முதன்மைக் கட்டுரை: இந்தியன் ஏர்லைன்சு பறப்பு 171
பத்ரகாளி திரைப்படத் தயாரிப்பின் இறுதிக் கட்டத்தில், கதாநாயகியாக நடித்த ராணி சந்திரா கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுப்பதற்காக தனது குழுவினருடனும் குடும்பத்தினருடனும் துபாய் சென்றார்.[4] கலை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 1976 அக்டோபர் 11 இல் பம்பாய் வழியாக சென்னை திரும்புகையில், அவர்கள் பயணம் செய்த விமானம் தீப்பிடித்துக் கொண்டு விமான நிலையத்திற்கு அண்மையில் மோதி விபத்துக்குள்ளானது. ராணி சந்திரா, அவரது தாயார், மூன்று தங்கைகள் அம்புலி (வயது 19), சீதா (18), நிம்மி (13) ஆகியோர் உட்பட அதில் பயணம் செய்த அனைத்து 95 பேரும் உயிரிழந்தனர்.[5]
இதனால், இவர் நடிக்க இருந்த பத்ரகாளி தமிழ்த் திரைப்படத்தின் மீதிக் காட்சியை ஓரளவு அவரைப் போன்றே உருவ அமைப்புள்ள பட்டிக்காட்டு ராஜா படத்தில் நடனமாடிய புஷ்பா என்ற துணை நடிகையை நடிக்க வைத்து எடுத்து முடித்தார் இயக்குநர் ஏ. சி. திருலோகச்சந்தர்.[6][6][7][8]
Remove ads
விருதுகள்
- 1975 சிறந்த நடிகைக்கான கேரள அரசு விருது
நடித்த சில திரைப்படங்கள்
- மல்லனும் மாதேவனும் (மலையாளம், 1976)
- பத்ரகாளி (தமிழ், 1976)
- தேன்சிந்துதே வானம் (தமிழ், 1975)
- ராதா (தமிழ், 1973)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads