லாயாங் லாயாங் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
லாயாங் லாயாங் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Layang-Layang Railway Station; மலாய்: Stesen KTMB Layang-Layang) என்பது மலேசியா, ஜொகூர், குளுவாங் மாவட்டம், லாயாங் லாயாங் நகர்ப்பகுதியின் மையத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.[1]
இந்த நகரம் எந்த ஒரு பெரிய முதனமைச் சாலையாலும் இணைக்கப்படவில்லை. உள்ளூர் சாலைகளில் ஒரு சாலை மட்டுமே லாயாங் லாயாங் நகரத்தை; குளுவாங்-ரெங்கம் சாலையுடன் இணைக்கிறது. கேடிஎம் இண்டர்சிட்டி தெற்கு நகரிடை தொடருந்துகள் (Ekspres Selatan) சேவையாற்றத் தொடங்கியதில் இருந்து இந்த நகரம் புகழ் பெற்றது.[2]
Remove ads
பொது
மலேசியாவின் பழைமையான தொடருந்துகளில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலையம் 1909-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM West Coast Railway Line) அமைந்துள்ள இந்த நிலையத்திற்கு, கேடிஎம் இண்டர்சிட்டி சேவைகளை வழங்குகிறது. லாயாங் லாயாங் நகரத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், லாயாங் லாயாங் நகரத்தின் பெயர் இந்த நிலையத்திற்கும் வழங்கப்பட்டது.
2021-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து பயணிகளின் செயல்பாடுகள் லாயாங் லாயாங் தற்காலிகத் தொடருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டன. புதிய லாயாங் லாயாங் நிலையத்திற்கு சில மைல் தொலைவில் ஒரு வழித்தடத்தைக் கொண்ட ஒரு நிலையம் தற்காலிகமாகக் கட்டப்பட்டு உள்ளது.
புதிய நிலையம்
புதிய லாயாங் லாயாங் நிலையம் திறக்கப்பட்டதும், பழைய நிலையம் ஒரு பாரம்பரியக் கட்டிடமாக, பழைய நிலையில் அப்படியே தக்க வைக்கப்படுமா என்பது பற்றி இன்னும் தெரியவில்லை.
புதிய லாயாங் லாயாங் நிலையத்தில் நடைபெறும் சீரமைப்பின் காரணமாக, பழைய லாயாங் லாயாங் நிலையம் பயணிகளின் பொது வசதிகளுக்காக மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. புதிய லாயாங் லாயாங் நிலையத்தில் பயணிகளுக்கான செயல்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை. புதிய லாயாங் லாயாங் நிலையத்தைச் சுற்றியுள்ள பாதைகளில் செப்பனிடும் பணிகள் 2021 டிசம்பரில் தொடங்கப்பட்டன.
Remove ads
கிம்மாஸ் - ஜொகூர் பாரு மின்மயமாக்கல் திட்டம்
கிம்மாஸ் - ஜொகூர் பாரு மின்மயமாக்கப்பட்ட இரட்டை கண்காணிப்பு திட்டத்தின் (Gemas-Johor Bahru Double Tracking and Electrification Project) ஒரு பகுதியாக புதிய லாயாங் லாயாங் நிலையம் கட்டப்படுகிறது.
பழைய நிலையம் 8 மார்ச் 2022 அன்று மூடப்பட்டு, அதற்குப் பதிலாக, சற்று தொலைவில் உள்ள கெனாங்கான் (Kampung Kenangan) எனும் கிராமப் பகுதியில் ஒரு தற்காலிக நிலையம் உருவாக்கப்பட்டது.
புதிய கேடிஎம் இடிஎஸ் மின்சாரச் தொடருந்து சேவைகளுக்கு இடமளிக்கும் வகையில், ஜொகூர் மாநிலத்தில் உள்ள தொடருந்து வழித்தடங்களில் தற்போது மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.[3]
மலாயா கடற்கரை மேற்குத் தொடருந்து வழித்தடத்தில் இரட்டைப் பாதை மற்றும் ஒற்றைப் பாதைகளை மின்மயமாக்கும் திட்டமே மலேசிய மின்மயமாக்கல் திட்டம் ஆகும்.[4]
Remove ads
மேலும் காண்க
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads