வங்கம் (நீரூர்தி)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வங்கம் என்னும் சொல் பாய்மரக் கப்பலை உணர்த்தும் சொற்களில் ஒன்று. நாவாய், கலம் என்னும் சொற்களும் பாய்மரக் கப்பலை உணர்த்தும்.

  • வங்கம் கடல்நீரைப் பிளந்துகொண்டு செல்லும்.[1]
  • வெள்ளைத் துணியாலான இதை என்னும் பாய் அதில் கட்டப்பட்டிருக்கும்.[2]
  • மருங்கூர்ப் பட்டினம் துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்த வங்கத்தின் கூம்பில் கடற்காக்கைகள் அமர்ந்து தன் இரையை உண்டதாம். [3]
  • அரிய பொருள்களை வங்கத்தில் கொண்டுவந்தார்களாம்.[4]
  • சுழலும் புயலான் வங்கம் சிதைவது உண்டு. அப்போது அதன் கூம்பு முறியும். அதில் கட்டிய கயிறு அறுபடும். இதை என்னும் பாய் கிழிந்து சிதையும். அதனை ஓட்டும் ‘மீயான்’ நடுங்குவான். மீயானை மீகாமன் என்பர். [5] [6] [7]
  • சாவக நாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே வங்கப் போக்குவரத்து இருந்தது. [8]
  • வங்கம் இரவில் செலுத்தப்படும். [9] அப்போதுதான் திசை அறிய உதவும் வானத்து மீன்கள் தெரியும்.
Remove ads

ஆற்றில் வங்கம்

  • கங்கையாற்றில் உலவவும், கங்கையைக் கடக்கவும் வங்கம் பயன்படுத்தப்பட்டது. [10]
  • தமிழகத்தில் நல்லூர் என்னும் ஊரின் ஆற்றுத் துறையில் வங்கம் கயிற்றால் பிணித்து நிறுத்தப்பட்டிருந்தது. [11]

வங்க வண்டி

  • வளைந்த சக்கரக் கால்களை உடையது வங்கவண்டி. இது மூடாக்குப் போட்ட கூட்டுவண்டி. [12]
  • புதுவெள்ளம் வந்ததும் வைகையாற்றில் புனலாடச் சென்றவர்கள் அவசரத்தில் தேரில் பூட்டவேண்டிய குதிரைகளை வங்கத்திலும், வங்கத்தில் பூட்டவேண்டிய பாண்டில் எருதுகளைத் தேரிலும் தலைகால் தெரியாமல் பூட்டினார்களாம். [13]

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads