வர்ண ரத்னாகரம்
மைதிலி மொழியின் மிகப் பழமையான இலக்கியப் படைப்பு From Wikipedia, the free encyclopedia
Remove ads
வர்ண ரத்னாகரம் (Varna Ratnakara) அதாவது "விளக்கக் கடல்" என்பது மைதிலி மொழியின் பழமையான உரைநடை ஆகும்.[3] இது பொது ஊழி 1324 இல் மைதிலி அறிஞரும் கவிஞருமான ஜோதிரீசுவர் தாக்கூரால் எழுதப்பட்டது.[4][5][6] ஆசிரியர் கர்னாட் வம்சத்தின் மன்னர் அரிசிம்மதேவனின் ( ஆட்சி. 1304-1324) அரசவையின் ஒரு பகுதியாக இருந்தார். அதன் தலைநகரங்கள் சிம்ரௌங்காத் (இப்போது நேபாளம் ) மற்றும் தர்பங்கா (இப்போது பீகார் ) ஆகிய இரண்டிலும் இருந்தன.[7]
இந்தப் பணி பல்வேறு பாடங்கள் மற்றும் சூழ்நிலைகளின் விளக்கங்களைக் கொண்டுள்ளது. இது இடைக்கால இந்தியாவின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரம் பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வழங்குகிறது.[8] உரை நகர வர்ணம், நாய்க வர்ணம், அஸ்தான வர்ணம், ரிட்டு வர்ணம், பிரயாண வர்ணம், பதாதி வர்ணம் மற்றும் சம்சான வர்ணம் என ஏழு அலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 84 சித்தர்களின் முழுமையற்ற பட்டியல் 76 பெயர்களைக் கொண்ட உரையில் காணப்படுகிறது. இந்த உரையின் கையெழுத்துப் பிரதி, கொல்கத்தாவில் உள்ள ஆசியச் சமூகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது.[9]
இந்த கலைக்களஞ்சியப் படைப்பில் அபகத்தம் என்ற சொல் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.[10] பின்னர் மைதிலிக் கவிஞர் வித்யாபதி தனது கீர்த்திலதா என்ற கவிதையை அபகத்தத்தில் எழுதினார்.[11]
Remove ads
நூலாசிரியர்
வர்ண ரத்னாகரம் ஜோதிரீசுவர் தாக்கூரால் எழுதப்பட்டது. இவர், மைதிலி பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் மிதிலையின் கர்னாட் வம்சத்தின் மன்னர் அரிசிம்மதேவரின் அரசவைக் கவிஞர் ஆவார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads