வாமதேவர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வாமதேவர் (Vamadeva) வேதகால ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ள முனிவர்களில் ஒருவர். வாமதேவர் சப்தரிஷிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். ரிக் வேதத்தின் நான்காம் மண்டலம் மற்றும் பிரகதாரண்யக உபநிடதம் மற்றும் ஐதரேய உபநிடதங்களில் வாமதேவ முனிவரின் பெயர் பல இடங்களில் காணப்படுகிறது. இவரது தந்தையின் பெயர் கௌதம முனிவர். இவரது உடன்பிறப்பான நோதாவையும் ரிக் வேதம் குறிப்பிடுகிறது.

பௌத்தத்தில் வாமதேவ முனிவர்

பௌத்த நூலான வினய பிடகத்தில் (I.245)[1]கௌதம புத்தர் வாமதேவர், விசுவாமித்திரர், ஜமதக்கினி, அங்கரிசர், பாரத்துவாசர், காசிபர், பிருகு போன்ற முனிவர்களை வணங்கி மரியாதை செய்ததாகக் குறிப்பிடப்படுகிறது. "[2][3]

இதனையும்

மேல் வாசிப்பிற்கு

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads