வாரங்கல் கிராமபுற மாவட்டம்
தெலுங்கானாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வாரங்கல் கிராமபுற மாவட்டம் (Warangal Rural district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் வாரங்கல் நகரம் ஆகும்.[1] வாரங்கல் மாவட்டத்தின் கிராமபுற பகுதிகளைக் கொண்டு இம்மாவட்டம் புதிதாக அக்டோபர், 2016-இல் துவக்கப்பட்டது.[2] வாரங்கல் மாவட்டத்தின் நகர்புறப் பகுதிகளைக் கொண்டு அனுமக்கொண்டா மாவட்டம் அக்டோபர், 2016ல் துவக்கப்பட்டது.


Remove ads
மக்கள் தொகையியல்
2175.50 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[3] வாரங்கல் கிராமபுற மாவட்டத்தின், 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 7,16,457 ஆகும்.[3] இம்மாவட்ட மக்களில் பெரும்பான்மையினர் தெலுங்கு மொழியை பேசுகின்றனர். இசுலாமியர்களில் சிலர் உருது மொழி பேசுகின்றனர்.
மாவட்ட நிர்வாகம்
வாரங்கல் கிராமப்புற மாவட்டம் நரசம்பேட்டை மற்றும் வாரங்கல் (கிராமப்புறம்) என இரண்டு வருவாய்க் கோட்டங்களைக் கொண்டுள்ளது. இக்கோட்டங்கள் 15 வருவாய் வட்டம்|மண்டல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[2]
மண்டல்கள்
வாரங்கல் கிராமப்புற மாவட்டத்தின் வருவாய் கோட்டத்தில் உள்ள மண்டல்கள்:
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads